Skip to main content

“திராவிடர்களை வெளியேற்றிவிட்ட பிறகு என்ன மாடல் இருக்கும்?” - முன்னாள் எம்.பி. ஆவேசம் 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வகை அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலங்களை வகை மாற்றம் செய்து கிரையப் பத்திரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று வானகரம் - போரூர் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே மாநாடு நடைபெற்றது. 

 

இந்த மாநாட்டில் முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன் பேசியதன் சுருக்கம்; “நீர்நிலை பாதுகாப்பு என்ற பெயரில் பொதுநல வழக்கு தொடுப்பவர்கள் பாஜக-வினராக உள்ளனர். இத்தகைய வழக்குகளில் என்ன பொதுநலன் உள்ளது என்று நீதிபதிகள் கவனிக்க வேண்டும். 25 வருடங்களுக்கு முன்பு 3 கோடியாக இருந்த தமிழக மக்கள் தொகை தற்போது 7 கோடியை தாண்டியுள்ளது. இதன் காரணமாக நகரம் வளர்கிறது. நகர கட்டமைப்பு முறையாக இல்லாததால் மக்கள் ஆங்காங்கே குடியேறுகிறார்கள். அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ள மக்களிடம் குடிமனைப் பட்டா மட்டும் இல்லை. வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் இடம் பெறும்போது, அந்த வசிப்பிடம் அவருக்கு சொந்தம்தானே?


திமுக ஆட்சிக்கு வர மார்க்சிஸ்ட் கட்சி துணை நின்றது. நீட், ஆளுநர் அத்துமீறல் எதிர்ப்பு, மாநில உரிமை பாதுகாப்பு போன்றவற்றில் திமுக-வை ஆதரிக்கிறோம். இந்த அரசு நீடிக்க வேண்டும். அது தொடர பட்டா கொடுக்க வேண்டும். அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். மக்களின் குரலை ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.


கடவுளுக்கு நிகராக, மன்னர்களுக்கு இணையாக நீதிபதிகளை மக்கள் பார்க்கின்றனர். நீதிமன்றத்தின் மாண்புகளை காக்கும் வகையில் நீதிபதிகள் செயல்பட வேண்டும். திராவிடர்களை வெளியேற்றிவிட்ட பிறகு என்ன மாடல் இருக்கும்? மக்கள் இல்லாத மாடல் என்ன மாடல் அது? எனவே, நீண்ட காலம் குடியிருக்கும் மக்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

 

அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசுகையில், “சென்னையில் 250 ஏரிகள் வரை இருந்தது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் சென்னை நகரை பெயர்த்து வேறு இடத்திற்குதான் கொண்டு செல்ல வேண்டும். 5 ஆண்டுகள் அறுவடை நடைபெறாத நிலங்களை வகைமாற்றம் செய்து குடியிருப்பு பகுதியாக மாற்ற சட்டம் உள்ளது. ஆடு, மாடு மேயாத சென்னை நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் எதற்கு? ஆகவே, பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.


ஏரிகளுக்குள் கட்டப்பட்ட நீதிமன்றங்களில் இருந்து கொண்டு, பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிப்போரை, நீர்நிலை என்று கூறி அகற்ற நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். சென்னை நகரில் தினசரி குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தற்போது மக்கள் வசிக்கும் இடங்கள் ஆக்கிரமிப்புகள் என்றால், அந்த இடங்களை ஒதுக்கீடு செய்த அதிகாரிகளைத்தான் நீதிமன்றங்கள் கைது செய்ய வேண்டும். ஆகவே, தற்போதுள்ள நீர்நிலைகளை பாதுகாத்துக் கொண்டு, பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்” என்று கூறினார்.

 

மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், “சென்னையில் 50 விழுக்காடு குடும்பங்கள் குடிமனைப்பட்டா இல்லாமல் உள்ளன. இதை சரி செய்ய வேண்டும். குடியிருப்புகளை அகற்றும் நீதிமன்றம், அரசு உத்தரவுகளை எதிர்கொள்ள ஒற்றுமையை பலப்படுத்துவோம்” என்றார்.

 

இந்த மாநாட்டில், சி.பி.ஐ.எம். பகுதிக்குழு உறுப்பினர் கே.ரமேஷ், கிளைச் செயலாளர் பழனி, மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பீம்ராவ், மாநிலக் குழு உறுப்பினர் பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.