Skip to main content

வைகை அணை வனவியல் கல்லூரியில் நடக்கும் மர்மம் என்ன? பீதியை கிளப்பும் 6 கோடி டெண்டர்!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

ஆண்டிபட்டி - வைகை அணை அருகில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லாரியில் நடந்த ஆறு கோடி டெண்டரின் மர்மம் என்ன? என்ற பீதி காண்ட்ராக்டர்களிடமும் பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது. 

தேனி மாவட்டதில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் வைகை அணை அருகில் வனவியல் பயிற்சி கல்லூரி கடந்த 1961 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கட்டிடம் கட்டுதல், பஸ்கள் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்காக ஆறு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் நடை பெற்ற டெண்டர் முறையாக நடைபெறவில்லை என்றும், பெயர் அளவிற்கு மட்டுமே பி.ஆர்.ஓ. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு, அரசு நாளிதழில் டெண்டர் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்டக்கால இடைவெளியில் ஆன்லைன் டெண்டர் மூலமாகவோ (அ) சீல் இடப்பட்ட உரையில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட வேண்டும் என்பது அரசு விதி.

 

 What is the mystery of the Vaigai Dam Forest College? 6 crores tender

 

ஆனால் இதில் எதுவுமே கல்லூரி முதல்வர் முறையாக பின்பற்றவில்லை என்றும், நேர்மையான முதல்வராக இருந்தும் அவருக்கு கீழ் பணிபுரியும் சில அதிகாரிகள் செய்யும் ஊழல்களை ஏன்? தடுக்கவில்லை. இதனால் கல்லூரி முதல்வருக்கும், வனவருக்கும் மறைமுகமாக ஏதோ உள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, நேர்மையாக பணிபுரிவதாக கூறிக்கொள்ளும் கல்லூரி முதல்வர், ஏன்? இங்கு பணிபுரியும் வனச்சரகரின் உறவினருக்கு பினாமி பெயரில் டெண்டர் வழங்க அனுமதிக்க வேண்டும். முதல்வருக்கு தவறு என்று தெரிந்தும் ஏன்? அந்த வனசரகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் முதல்வருக்கும் வனச்சரகருக்கும் ஏதும் மறைமுக பிரச்சனை உள்ளதா? இதனை அரசு  விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். அப்படி விசாரித்தால் வனச்சரகர்தான், கல்லூரியில் உள்ள அனைத்து வேலைகளையும், ஆட்கள் வைத்து செய்வது தெரியவரும். மேலும் சில வேலைகளை செய்யும் போதும் பொருட்கள் வாங்கும் போதும்  போலி பில்கள் தயாரித்து பணம் வாங்கியதும் தெரிய வரும். இதற்கு கருவூலத்தில் உள்ள பைல்களே சாட்சி.மேலும் நேரடி நியமன வனவர்களிடம் பயிற்சியின் போது ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ 10 ஆயிரம் வசூல் செய்துள்ளனர். அதற்கு முறையான கணக்குகள் தராமல் பயிற்சி முடிவின் போது சிறிது பணமே கொடுத்தாக பயிற்சி முடித்த வனவர்கள் புலம்பிச் சென்றனர். மேலும் ஒப்பந்த தாரர்களிடம் முன் கூட்டியே பேசி ஏன் டெண்டர் விட வேண்டும்? இதுதான் நேர்மையா?

டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். ஒழிவு மறைவு இல்லாத டெண்டர் வேண்டும். உள்ளே பணிபுரியும் யாரும் பினாமி பெயரில் டெண்டர் எடுத்து பணிகள் செய்ய கூடாது. இதில் எதுவும் பின்பற்றவில்லை என்றால் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நியமன வனவர்கள் பயிற்சியில் மதுரையை சேர்ந்த பயிற்சி வனவர் ஒருவர் கல்லூரி விடுதியிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குரூப்-2 தேர்வில் தோல்வி பெற்றதால் தற்கொலை என கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

கல்லூரியில் விடுமுறை தராமல் தொடர்ச்சியாக நெடுந்தூர பயணத்திற்கு லாயக்கற்ற ,ஒரு சுவாரஜ் மஸ்தா வாகனத்தில் தமிழ்நாடு முழுவதும் களக் கல்வி பயணம் கொடுத்ததால் வனத்துறையை விட்டு வெளியே தம்பித்து வர வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அந்த வனவர் மன உளைச்சல் ஏற்பட்டு இறந்ததாக அவருடன் பயின்ற வனவர்கள் தற்போது தெரிவிக்கன்றனர்.

முதல்வர், மாவட்ட கலெக்டரிடம் நன்கு  பழக்கம் வைத்து உள்ளதால், கல்லூரி நிர்வாகம் சம்மந்தமாக, அவரிடம் புகார் தந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறாரோ? என்று தெரியவில்லை என தெரிவித்தனர். இப்படி ஆண்டிபட்டி வனவியல் பயிற்சி கல்லூரி யில் நடந்து வரும்  முறைகேடுகளை கண்டுபிடித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.