Skip to main content

எந்த வகை கைதிகளை ஜாமீனில் விடுவிக்கலாம்? -உயர்மட்டக்குழு அமைக்கக்கோரிய வழக்கில் உத்தரவு!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை விடுதலை செய்யும்போது, எந்த வகை கைதிகளை விடுதலை செய்யலாம் என முடிவு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு உள்துறை செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, சிறைக் கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும், புதுச்சேரியிலும், விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என பலவகை கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளின் ஜாமீன் மனுக்கள் நிலுவையில் உள்ளன.

 

What kind of prisoners can be released on bail? In the event that you need to set up the board!


இவர்களில் எந்தவகை கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என முடிவெடுக்க, உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, செய்யாறைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை,  நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, வீடியோ கால் மூலம் விசாரித்தது. அப்போது, எந்த வகை கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என முடிவெடுக்க,   மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, உள்துறை செயலாளர், டி.ஜி.பி., அடங்கிய குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது, நீதிபதி வினீத் கோத்தாரி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் தலைவராக தான் பதவி வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.  அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்தக் குழு கடந்த மார்ச் 26-ம் தேதி கூடி ஆலோசித்ததாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஜாமீன் மனுக்கள் மீது விரைந்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தும்படி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.