Skip to main content

மூன்றாம் கட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு திறன் எவ்வளவு?

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

What is the immunity in the third phase study?

 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் கூட்டு எதிர்ப்பு திறன் எவ்வளவு உருவாகி இருக்கிறது என்பதைக் கண்டறிய மூன்றாம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு, அந்த முடிவுகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 26,610 மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில் 17,624 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்தது. 26,610 மாதிரிகளில் 888 திரள்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும் அடங்கும். 

 

ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டில் 66.2% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84%, குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37% நோய் எதிர்ப்புத் திறன் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 31% ஆக இருந்த நோய் எதிர்ப்பு திறன், கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இரண்டாம் கட்ட ஆய்வில் 29% ஆக குறைந்திருந்தது. 

 

முதற்கட்ட ஆய்வில் 49% நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட ஆய்வில் 28% ஆக குறைந்து தற்போது 58% ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதலில் 34% ஆக இருந்து 49% ஆக அதிகரித்து தற்போது 67% ஆக மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 41%- ல் இருந்து 49% ஆகி, தற்போது 82% ஆக அதிகரித்துள்ளது. 

 

விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்ட ஆய்வில் 40% ஆக இருந்து, இரண்டாம் கட்டத்தில் 22% ஆக குறைந்து தற்போது 84% ஆக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது 97,60,000 பேர் தடுப்பூசி செலுத்தி முடித்திருந்தபோது ஆய்வு நடத்தப்பட்டது. மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டு நோய் எதிர்ப்புத் திறன் 45% என்ற அளவிலேயே இருப்பதால் அங்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.