Skip to main content

என்ன அவசரம்? நிர்வாகிகளை எகிறிய பிரேமலதா

Published on 03/03/2019 | Edited on 05/03/2019

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இந்த பக்கமா அந்த பக்கமா என மதில் மேல் பூனையாக தேமுதிக தொடர்ந்து தன்னை வெளிப்படுத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் 5 பிளஸ் ஒன்று என்றும், திமுக கூட்டணியில் நான்கு பிளஸ் ஒன்று என்றும் அமமுகவில் 14 என்றும் தேமுதிகவின் போட்டி இடங்கள் ஊடகத்தின் மூலமாக வெளிப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மற்றொருபுறம் திமுக அல்லது அதிமுக  என்ற அளவில் சீட் சேரிங் ஒருபுறம் இருந்தாலும் வைட்டமின் ''ப'' தான் மூலக்காரணமாக இருப்பதாக அக்கட்சியில் உள்ள நிர்வாகிகளே கூறுகிறார்கள்.

 

dmdk

 

ஒரு இடத்தில் 250 ''சி'' என்றும் மறுபுறத்தில் 400 ''சி'' வரை பேசப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுகவா  அதிமுகவா என எதுவும் தெரியாமல் அக்கட்சியில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்களான பார்த்தசாரதி,அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் என யாருக்குமே உண்மை புரியவில்லை. 

 

 

இப்படி இருக்க இந்த ரகசிய பேச்சுவார்த்தை கட்சியின் பொருளாளரான விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகிய இருவர் மட்டுமே பேசுவதற்கும், முடிவு செய்வதற்கும் அனைத்தும் அறிந்தவர்களாக உள்ளார்கள். அக்கட்சியில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை பெரும் குழப்பத்தில் உள்ளார்கள். இது இப்படி இருக்க நேற்று இரவு பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.அப்போது அடுத்து பாஜக ஆட்சிதான் அமையப்போகிறது. அதில் உங்களுக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என கூறியதோடு தமிழக பாஜக பொறுப்பாளரான முரளிதர ராவ் அவரிடம் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பிரேமலதாவை பேசவைத்திருக்கிறார். ஆனால் எந்த பிடியும் கொடுக்காமல் இன்னும் ஓரிருநாளில் கூறுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு தமிழிசை 6 ஆம் தேதி மோடி வரும் பொதுக்கூட்டத்தில் நமது கூட்டணித் தலைவர்கள் முழுமையாக மேடையேற வேண்டும் அதற்குள் நல்ல முடிவை சொல்லுங்கள் என கூறி வந்துள்ளார்.

 

dmdk

 

 இந்த பேச்சு வார்த்தைகள் டிமாண்ட், பேரம் இப்படி எல்லாம் ஓடிக்கொண்டிருக்க தேமுதிகவின் கொங்கு மண்டல முக்கிய நிர்வாகிகள் சிலர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்த்தித்துள்ளார்கள். அப்போது அவர்கள் அரசியல் எதிர்காலத்தை கவனித்து சீக்கிரமாக முடிவெடுங்கள் என கூறியுள்ளார்கள். அதற்கு அவர்களிடம் பேசிய பிரேமலதா என்ன அவசரம் தேர்தல் தேதியா அறிவித்துவிட்டார்கள் என கேட்டதோடு, திருப்பூர் இல்லைனா விட்டுடலாமா சேலம் இல்லைனா விட்டுடலாமா என கேட்டிருக்கிறார். அதற்கு நிர்வாகிகள் எந்த கட்சி கூட்டணி என்று கேட்க அது எந்தகட்சியாக இருந்தால் என்ன நம் எதிர்காலத்தை சரியாக தீர்மானிப்போம் அவசரப்படாதீங்க என்று கடுகடுப்பாக கூறியிருக்கிறார். கட்சி நிர்வாகிகள் கேப்டன்தான் எக்குத்தப்பாக குழப்புவார் என்றால் அவர் மனைவி பிரேமலதாவும் நம்மை தலைசுற்ற வைக்கிறாரே என கிறுகிறுப்பாக பேசுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.