ADVERTISEMENT
ADVERTISEMENT
நேற்று சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை டெல்லி தலைமை தான் அறிவிக்கும் எனக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் அதிகமாக தேர்தலில் வென்றது அதிமுக தான். அவர் கூறியது நம்முடைய மாநிலத்திற்கு பொருந்தாது. அவர் வேறு எந்த ஸ்டேட்டிற்கோ சொல்கிறார். நம்மைப் பொருத்தவரை தெளிவாக இருக்கிறது. நம் மாநிலத்தில் 10 தேர்தல்களில் ஏழு தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த ஏழு தேர்தலிலும் பெரும்பான்மையோடு தான் ஜெயித்திருக்கிறோம் என்றார்.
ADVERTISEMENT
Show comments