Skip to main content

சுஜித் மீட்கப்பட்ட கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? விளக்கும் வீரமணி குழு...

Published on 30/10/2019 | Edited on 30/10/2019


மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுஜித் வில்சன் என்ற  2 வயது சிறுவன் விழுந்துவிட்டான் என்ற தகவல்கள் பரவியபோது ஒட்டுமொத்த தமிழக மக்களும் தீபாவளிக்காக பொருள் வாங்குவதை மறந்து தொலைக்காட்சிகள் முன்பு அமர்ந்துவிட்டனர். பலர் நேரில் காண புறப்பட்டுவிட்டனர். இளைஞர்கள் பலர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று தாங்கள் உருவாக்கிய கருவிகளுடன் பயணித்தனர். மீட்புப் பணியில் தாமதம் என்ற செய்தி அறிந்து பலர் அவசரமாக கருவிகளை உருவாக்கிக் கொண்டு கிளம்பினார்கள். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் தங்களின் விருப்ப கடவுள்களிடம் வேண்டுதல்களை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து கண்களை துடைத்துக் கொண்டனர்.

 

 What happened in the last minutes of Sujith's recovery? Explaining Veeramani Team ...


எப்படியும் குழந்தை சுஜித் தீபாவளி கொண்டாட வருவான். யாராவது அவனை மீட்டு வருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது. மத்திய, மாநில மீட்புக்குழுக்கள், என்எல்சி, ஒஎன்ஜிசி, என்று பல அரசு தரப்பு வல்லுநர்கள் வந்துவிட்டார்கள் மீட்கப்படுவான் சுஜித் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அனைவரின் நம்பிக்கையும் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள்ளேயே போட்டு புதைக்கப்பட்டுவிட்டது. நம்மை காக்க போராடுகிறார்கள் நாம் வெளியே வருவோம் என்ற சைகை மூலம் அசைத்த கைகள் தனது இறுதிப் பயணம் என்பதை உணரவில் அந்த பிஞ்சு.
   

இந்தநிலையில்தான் சனிக்கிழமை காலை மீட்பு முயற்சியில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம்  கொத்தமங்கலம் வீரமணி குழுவினரின் பார்முலா சரியானதுதான் என்றாலும் விரல்கள் கூட தெரியாமல் மண் சரிந்திருந்ததால் முயற்சி தோல்வியடைந்தது. வெற்றியாக்க அவகாசம் கிடைக்காமல் தவித்தனர். அதன் பிறகு அரசு இயந்திரங்கள் வந்த பிறகு தனியார் குழு, தனி நபர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. கனத்த இதயத்தோடு வீடு திரும்பிய வீரமணி குழுவினருக்கு திங்கள் கிழமை மதியம் மீண்டும் அழைப்பு வந்து சென்றனர்.

 

s

 

அங்கே நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார்கள் வீரமணி குழுவினர்..
   

இரண்டாவது முறையாக அழைக்கப்பட்டதால் எப்படியும் குழந்தையை மீட்போம் என்ற நம்பிக்கையோடு மேலும் சில உபகரணங்களை செய்து கொண்டு 7 பேர் சென்றோம். போனவுடன் மீட்புப் பணியில் இருந்த என் எல் சி, ஒ என் ஜி சி குழுவினர் எங்கள் பார்முலா பற்றி கேட்டனர் செயல் விளக்கத்தோடு சொன்னோம். இந்த முயற்சி பலன் தரும். காத்திருங்கள் இரவு 10 மணிக்கு உங்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்றனர். காத்திருந்தோம் 12 மணி ஆனது. பரபரப்பாக இருந்தனர் அந்த அடைக்கப்பட்ட  ஆழ்குழாய் கிணறு பகுதியில் சற்று நேரத்தில் நம்மை அழைப்பார்கள் என்று தயாராக நின்றோம்.
 

ஆனால் அந்த  நேரத்தில்தான் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதாக ஒரு பாலிதீன் பையோடு ஆம்புலன்ஸ் நோக்கி சென்றார்கள். மனது வலித்தது எங்களுக்கு குழந்தையை உயிருடன் மீட்க முதல்நாட்களில் போராடினோம். இப்பவும் அதற்காகத் தான் வந்தோம் ஆனால் இப்படி நடந்துவிட்டதே என்று கண்ணீரோடு கிளம்பினோம்.
 

இப்பவும் எங்களால் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்ற மன அழுத்தம் சாப்பிடக் கூட முடியவில்லை என்றனர் கண்கள் கசிய.
   

இனியும் இப்படி ஒரு சம்பவம் எங்கேயும் நடக்க கூடாது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை என்றும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது இறுதியானதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.