Skip to main content

''ஆளுநர் சொன்னது வரவேற்கத்தக்க உண்மை''-அமைச்சர் பொன்முடி பேட்டி

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

"What the governor said is a welcome truth" - Minister Ponmudi interviewed

 

தமிழ் மொழி மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் சொல்லியிருப்பது நமக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழகத்தில் மட்டும் சமத்துவம், சமூகநீதி இருப்பதைவிட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி பரப்பப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து ஒரு சமூகநீதி மாநாட்டை இந்திய அளவில் நம்முடைய தமிழக முதல்வர் நடத்தியுள்ளார். எனவே திமுகவை பொறுத்தவரை அம்பேத்கருக்கும் விழா எடுக்கிறோம் என்று சொன்னால் அது கொள்கை ரீதியாக எடுக்கின்ற விழா. அவருடைய கொள்கையை இளைஞர்களுக்கும் மற்றும் வளர்ந்து வருபவர்களுக்கும் எடுத்துச் சொல்வதற்காக நடக்கின்ற விழா.

 

தமிழக முதல்வர் நடத்துவது ஏதோ ஒரு அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. சமுதாய சீர்திருத்தத்திற்காக. சமூக நோக்கத்தோடு பாடுபட்ட அம்பேத்கர், அவரோடு ஒன்றிணைந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களை நாம் கொண்டாடுகிறோம் என்று சொன்னால் அவர்கள் சமூக நீதிக்காக இந்த சமுதாயத்தில் ஆண் பெண் வேறுபாடு இன்றி, ஜாதிய வேறுபாடு இன்றி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டார்கள். அதற்காகத்தான் அம்பேத்கர் பிறந்தநாளை தமிழக முதல்வர் சமத்துவ நாளாக குறிப்பிட்டு இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.

 

அப்போது செய்தியாளர்கள்  'தமிழ் மொழி மீது இந்தி மொழியை திணிக்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ''இன்று மாநில ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளை எல்லாம் புரிந்துகொண்டு, தமிழக அரசினுடைய எண்ணங்களையும் தெரிந்துகொண்டு இப்படி அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. உண்மையையே அவர் சொல்லியிருக்கிறார். இந்தி மொழி மிகவும் பிற்பட்டது தமிழ் மொழிதான் கலாச்சாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த மொழி என்றெல்லாம் அவர் அறிவித்திருக்கிறார். உண்மையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக தமிழினுடைய வரலாற்றைத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பது நமக்கு புரிகிறது. ஆகவே முழுமையாக தமிழுடைய வரலாற்றை அவர் தெரிந்துகொண்டு வரும் காலங்களில் உண்மையிலேயே முதல்வருடைய குரலுக்கு செவி சாய்த்து நடப்பார் என்று நம்புகிறோம். தமிழ் மொழி மீது இந்தி திணிக்கப்படாது என்று ஆளுநர் சொல்லியிருப்பது நமக்கு கிடைத்த வெற்றி'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.