Skip to main content

“அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவல்ல! மரியாதை” - அதிரடி காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

Published on 04/11/2021 | Edited on 04/11/2021

 

“What Aswini was den“What Aswini was denied was not food! Respect ”- Chief Minister Stalin ied was not food! Respect ”- Chief Minister Stalin

 

செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரி அருகே 81 பழங்குடியின குடும்பங்களுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், சமீபத்தில் கோயில் அன்னதானத்தில் இடம் மறுக்கப்பட்ட பழங்குடி பெண் அஸ்வினியும் ஒரு பயனாளியாக இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் அப்பெண் பேசியது. முதலமைச்சர் அஸ்வினி வீட்டிற்குச் சென்றது என இன்றைய ட்ரெண்டிங்காக இருக்கின்றது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது. சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.

 

அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிட்டார். திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே! ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது.

 

“What Aswini was denied was not food! Respect ”- Chief Minister Stalin

 

பூஞ்சேரி கிராமத்து இருளர் & குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக்கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன். இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது!

 

இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது. 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்