Skip to main content

மரம்வெட்டிகள் என்னவானார்கள்? –எண்கௌண்டர் செய்யப்போகிறதா ஆந்திரா போலிஸ்?

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வளர்ந்து நிற்பது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா கடத்தல்காரர்கள் அறிந்ததே. இந்த செம்மரங்கள் ரகசியமாக கடந்த 15 ஆண்டுகளாக வெட்டி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க ஆந்திரா அரசு பல முயற்சிகளை எடுத்தும், மரம் வெட்டுபவர்களை எண்கௌண்டர் செய்து 25க்கும் மேற்பட்டவர்களை கொன்றும், கடத்தல் கும்பல்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள், புரோக்கள் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தும் செம்மர கடத்தலை தடுக்க முடியவில்லை.

 

semmaram

 

 

semmaram

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ந்தேதி இரவு ஸ்ரீவாரிமொட்டு என்கிற பகுதியில் சிந்தமாலுபண்டா என்கிற இடத்தில் போலிஸார் ரோந்து சென்றபோது, காட்டுக்குள் மரம் வெட்டும் கும்பல் மரங்களை எடுத்துக்கொண்டு சென்றது. இதனைப்பார்த்து அதிர்ச்சியான அவர்கள் செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க ஐ.ஐீ காந்தாராவ், டி.எஸ்.பி ரமணண்ணா போன்றவர்கள் சம்பவயிடத்துக்கு வந்து எச்சரிக்கை செய்தோம், அவர்கள் எங்களை நோக்கி கற்களை வீசி தாக்கினார்கள். நாங்கள் பதிலுக்கு வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தினோம். அவர்கள் சிதறி ஓடினார்கள். ஒருவனை மட்டும் பிடித்துள்ளோம். அவன் தருமபுரியை சேர்ந்த குமார் என்பதும், அவனிடம் விசாரித்தபோது, 40 பேர் மரம் வெட்ட வந்தோம் எனக்கூறியுள்ளான். சிதறி ஓடியவர்களை தேடிவருகிறோம் என்றுள்ளனர்.

 

semmaram

 

 

semmaram

 

இதுதான் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிரடிப்படை இப்படித்தான் ஒருகதையை ஜோடிக்கும். எங்களுக்கு வந்த தகவல்படி மரம் வெட்டி வாகனத்தில் ஏற்ற காத்திருந்தபோது சுற்றி வளைத்துள்ளது. அதில் சிலர் தப்பி ஓடியுள்ளனர். பலர் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடித்து உதைத்து தகவல்களை பெறுவதற்காக கணக்கு காட்டாமல் வைத்துள்ளனர். பின்னர் கணக்கு காட்டுவார்கள் என்றவர்கள். கடந்த காலத்தை போல மரம் வெட்ட வந்த கூலி தொழிலாளர்கள் யாரையும் ஆந்திரா போலிஸ் சுடாமல் இருக்க வேண்டும், அதற்காக முயற்சி செய்துக்கொண்டுயிருக்கிறோம் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வல அமைப்பினர்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.