Skip to main content

“என்னய்யா புதுசு புதுசா ரூல்ஸ் போடறீங்க?”-பட்டாசு வழக்குகளும் மக்கள் மனநிலையும்..  

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

கொண்டாட்ட மனநிலையில் இருப்பவர்களை சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனம். ஆனாலும், சட்டம் தன் கடமையைச் செய்ததாகக் கணக்கு காட்டியிருக்கிறது.

 

 "What are new rules?" - Fireworks cases and people's mood ..

 

தீபாவளி நாளில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மதுரை மாவட்டத்தில் மட்டும் 62 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். தல்லாகுளத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் போலீசாரிடம் “என்னங்கய்யா இது நியாயம்?  காலம் காலமா பட்டாசு வெடித்துத்தானே தீபாவளி கொண்டாடுகிறோம்? அந்த நேரத்துல வெடிக்கணும்; இந்த அநேரத்துல வெடிக்கணும்னு இது என்னய்யா புதுசு புதுசா ரூல்ஸ் பேசுறீங்க?” என்று எகிற, காவல்துறையினரை பணியாற்ற விடாமல் தடுத்ததாக, அவர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பேரையூரை அடுத்துள்ள சத்திரப்பட்டியில் 67 வயது முதியவரான ராசுவும் கூட விதிமீறலாக பட்டாசு வெடித்த வழக்கில் கைதாகியிருக்கிறார்.

 

 "What are new rules?" - Fireworks cases and people's mood ..

 

பட்டாசு வெடித்த வழக்கில் கைதானவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டது, பட்டாசு வெடித்து மதுரை – திருமங்கலம் பகுதிகளில் 32 பேர் காயம் அடைந்ததெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எந்த உத்தரவையும் மதிக்காத போக்கு என்பது மக்களிடம் இருக்கவே செய்கிறது.  

 

 "What are new rules?" - Fireworks cases and people's mood ..


‘இங்கு குப்பை கொட்டாதீர்கள்! மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று அறிவிப்பு செய்திருந்தாலும், அந்த இடத்தில் குப்பை கொட்டி விடுகிறார்கள். சென்னையில் அருள்மிகு ஸ்ரீஎல்லையம்மன் திருக்கோவில் உள்ளது. அந்த கோவில் நிர்வாகம் ‘நாம் வணங்கும் தெய்வங்கள் அருள்பாலிக்கும் இடம். இங்கு குப்பையை கொட்டாதீர்கள். சுத்தமாக இருக்க ஒத்துழையுங்கள்.’ என்று தட்டி போர்டு வைத்து மக்களிடம் கெஞ்சுகிறது. ம்ஹும். ‘நீங்க என்ன சொல்லுறது? நாங்க என்ன கேட்கிறது?’ என்பதுபோல்,  அந்த இடத்திலும் குப்பை கொட்டவே செய்கின்றனர்.

இந்த விஷயத்தில் வேறென்ன சொல்ல முடியும்? எல்லாம் பழக்கதோஷம்தான்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.