ADVERTISEMENT

அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம், ஆனால் ரோடு இல்லை: ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

12:35 PM Aug 27, 2018 | Anonymous (not verified)


தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் விதமாக திருவண்ணமலையில் 3வது நாளாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது,

ADVERTISEMENT


10,000 கிலோமீட்டரில் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லலாம். அப்போ, ’அண்ணே அமெரிக்கா போவாமான்னு கேட்டுவிடாதீர்கள்’ எனெனில் அமெரிக்காவுக்கு செல்ல ரோடு இல்லை. ரோடு இருந்தால் நாம் அமெரிக்காவுக்கு செல்லலாம்.

ADVERTISEMENT

வேண்டுமென்றால் கப்பலில் சைக்கிளை ஏற்றி, அமெரிக்காவில் இறக்குவோம். ’அம்மாவின் அரசு குறித்து அமெரிக்காவில் சொல்வதற்கு முதல்வர் ஆணையிட்டால் திருவண்ணாமலையில் இருந்து அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம்’ என்று அவர் கூறினார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT