Skip to main content

குளத்தில் மூழ்கி 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
 pool



கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி பெரிய தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் சிவசக்தி(10). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரவீனா(12). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
 

சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கராமாரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகள்கள் வேதிஷா(11). இவர் சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கீர்த்தனா(10). இவரும் அதே பள்ளியில்  5ம் வகுப்பு படித்து வந்தார். சகோதிரிகள் 2 பேரும்  பள்ளி விடுமுறை என்பதால் கடவாச்சேரியில் உள்ள பாட்டி அஞ்சம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
 

 இந்த நிலையில் சனிக்கிழமை கடவாச்சேரியில்  சிவசக்தி, பிரவீனா, வேதிஷா, கீர்த்தனா  உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். இதில் சிவசக்தி, பிரவீனா, வேதிஷா, கீர்த்தனா உள்ளிட்ட  4 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்த மற்ற பெண்குழந்தைகள் அலறிக் கொண்டு ஊருக்குள் சென்று அங்கிருந்தவர்களிடம் 4  பேர் தண்ணீரில் மூழ்கியதை கூறியுள்ளனர்.
 

இதனையடுத்து பொதுமக்கள்  ஓடி சென்று குளத்தில் இறங்கி தேடி தண்ணீரில் மூழ்கிய பிரவீனா உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவசக்தி, பிரவீனா ஆகிய 2 பேரும் உயிரிழந்துவிட்டாத தெரிவித்தனர்.
 

வேதிஷா மற்றும் அவரது சகோதரி கீர்த்தனா ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து அண்ணாமலைநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கோவில் குளத்தில் மூழ்கிய நபர்; சோகத்தை ஏற்படுத்திய மனைவியின் செயல்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
A person drowned in a temple pool; The action of the wife that caused the tragedy

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவில் குளத்தில் குளிக்க சென்ற நபர் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் நபர் ஒருவர் குளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்த அவர் மூழ்கி போனார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வந்தது தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தேடி உடலை கண்டுபிடித்தனர்.

உயிரிழந்த நபரின் மனைவிக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த அந்த நபரின் மனைவி கண்ணீர் விட்டு அழுததோடு சிபிஆர் சிகிச்சை அளிப்பதுபோல அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். எப்படியும் கணவரை காப்பாற்றிவிடலாம் என அனைவர் முன்னும் அப்பெண் கதறி அழுதபடி அவருடைய மார்பு பகுதியை அழுத்தி சிபிஆர் சிகிச்சை கொடுத்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.