மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடர்பான 3 மசோதாக்களுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே இன்று வெல்ஃபேர் கட்சியைச் சேர்ந்தவர்கள் வேளாண் மசோதா நகலைதீயிட்டுக் கொளுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, வேளாண் மசோதா நகலை அவர்களிடம் இருந்து வாங்கினர்.