சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைசார்பில் ரூபாய் 90 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகளை இன்று (07.08.2021) அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
இதில், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.