Skip to main content

திருமண வரவேற்பில் இயற்கை வாழ்வியல்! - ருசியான பயிற்சிப் பட்டறை!

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

hjk


சிவகாசி நண்பரொருவர் “இன்று (22-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமைதானே..  திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்குப் போவோமே.. அது வித்தியாசமான  அனுபவமாக இருக்கும்..” என்று அழைத்தார். உடன் சென்றோம்.   ‘பாரெங்கும் முழங்கட்டும் தமிழிசை’ என்ற வாசகம் தாங்கிய வரவேற்பு  பேனரைக் கடந்து உள்ளே சென்றோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாதிரியே  தெரியவில்லை. அங்கங்கே ஸ்டால்கள் போட்டிருந்தனர்.  நிகழ்ச்சிக்கு  வந்தவர்கள்,  ஒவ்வொரு ஸ்டாலிலும் நின்று கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டனர். ‘நீரிழிவுக்கு துவர்ப்பாகச் சாப்பிடுங்கள்’ எனத்  தென்னங்குருத்தைச் சீவிக் கொடுத்தனர்.  

 

நறுக்கப்பட்ட பப்பாளிப் பழம்  மற்றும்  தர்பூசணித் துண்டுகள், அன்னாசிப் பழச் சீவல்கள், அத்திப்பழங்கள்,  கொழுக்கட்டைகள், மண் குவளையில் மழை நீர், சாத்துக்குடிச்சாறு என விதவிதமாகத் தந்தனர். நர்சரி செடி, மரக்கன்றுகள் எனக் கொடுத்தபடியே  இருந்தனர்.   மணமகனின் தந்தை மாறன்-ஜி என்பவர்,  தாய்வழி இயற்கை உணவகம்  மற்றும் இயற்கை வாழ்வியல் இயக்கத்தை நடத்துபவராம். சிவகாசி சிரிப்பு  மன்றமும் கைகோர்த்து, இத்தனை ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றனர்.   இயற்கை உணவுகள் இத்தனையையும் சாப்பிட்ட பலருக்கும்,  அங்கு ஏற்பாடு  செய்திருந்த இரவுச் சிற்றுண்டியைச் சாப்பிடுவதற்கு  வயிற்றில் இடம்  இல்லாமல் போனது. மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு திரும்பியவர்களின்  கையில் துணிப்பை ஒன்றினைத் தந்தனர். 

 

jk

 

அந்தத் துணிப்பையில், நோட்டு புத்தகம், ஆரோக்கிய வாழ்வுக்கான  விபரங்களை உள்ளடக்கிய புத்தகம், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதற்கான  சாஷே பாக்கெட்டுகள், நெல்லிக்காய், இஞ்சி, சீரகம், இந்துப்பு அடங்கிய நெல்லி  சுப்பாரி, நீரில்  கண்களைக் கழுவிப் பாதுகாப்பதற்கான குவளை,   வெள்ளரிக்காய், வாழைப்பழம், தேங்காய் மற்றும் மூலிகைப் பல்பொடி எனப்  பலவும் இருந்தன.   ‘பரபரப்பாக இயங்குகிறார்கள் மக்கள். இந்நிகழ்ச்சி வாயிலாக, உடல் நலம்  காப்பதில் சிறிதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என யோசித்தோம்.   இந்த ஏற்பாடுகளைச் செய்தோம்..’ என்றார்,  அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர்.   வந்தோமா, சாப்பிட்டோமா, மணமக்களுடன் நின்று போட்டோ எடுத்தோமா, கிளம்பினோமா என்ற அளவிலேயே பெரும்பாலானோர் உள்ள நிலையில்,  இயற்கை வாழ்வியலையும் ருசித்துத்தான் பாருங்களேன் எனப் பயிற்சிப்  பட்டறைபோல், அந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது, பாராட்டுதலுக்குரிய  நற்செயலே! 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.