The wedding banner that caused controversy...Pudumapillai arrested!

சில ஆண்டுகளாகவே பேனர் கலாச்சாரம் என்பது அரசியலில் மட்டுமல்லாது குடும்ப நிகழ்வுகளிலும் தலையெடுத்து வருகிறது. அதிலும்குறிப்பாகதிருமண விழாக்களில் நண்பர்கள் வைக்கும் பேனர்கள் சில நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலிருந்தாலும் சிலவை சர்ச்சையில் சிக்கும். அப்படி ஒரு திருமண பேனர் தற்பொழுது சர்ச்சையில் சிக்கி மணமகனை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம்இரணியல்அடுத்ததிங்கள்நகரில்வைத்த அந்த ஒரு கல்யாணபேனர் தான்அது. இந்து கடவுள் சிவபெருமான்சிகரெட்பற்றவைத்துபுகைபிடிப்பதைபோன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ள அந்த திருமண பேனர் சர்ச்சையை ஏற்படுத்த சில இந்து அமைப்புகள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்நிலையில் பேனரை வைத்த நண்பர்களிடமும், புதுமாப்பிள்ளையிடமும்போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.