Skip to main content

ஆசிரியர் செல்வக்குமாருக்கு 'வானிலை பேரறிஞர்' விருது... தோப்புத்துறை திருமண விழாவில் கெளரவிப்பு

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

'Weather Scholar' Award for Teacher Selvakumar ... Honored at the Tophuthurai Wedding Ceremony

 

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் முஹம்மதியா இல்ல திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது. மணமகன்  D. தன்வீர் அகமதுவுக்கும், மணமகள் M. பாத்திமாவுக்கும் நடைபெற்ற திருமண நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மு. தமிமுன் அன்சாரி, உ.தனியரசு , நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

 

இந்நிகழ்வில் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர், ஆசிரியர். செல்வக்குமாருக்கு அவரது சேவையை பாராட்டி 'வானிலை பேரறிஞர்' என்ற விருது வழங்கப்பட்டது.கஜா புயல் வீசிய தருணத்தில்  சரியான முறையில் புயலின் தாக்கத்தை கணித்து , மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் செல்வக்குமாரின் பெரிதும் பாராட்டப் பெற்றார்.

 

அதை மதிக்கும் வகையில், இப்பகுதியில் கல்வி, சுற்றுச்சூழல், நல்லிணக்கம் ஆகிய பணிகளில் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வரும் முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) சார்பில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருதை உ.தனியரசு முன்னாள் எம்எல்ஏ அளிக்க, ஆசிரியர் செல்வக்குமார் பெற்றுக் கொண்டார்.

 

பிரதிபலன் பாராமல் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு மக்களிடம் முன் எச்சரிக்கை செய்யும்  பணிகளில் ஈடுபட்டு வரும் அவருக்கு விருது வழங்கப்பட்டது பலராலும் பாராட்டப்படுகிறது.

 

இந்நிகழ்வில் கல்வி சேவகர் ஆரிபா, முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி துணை தாளாளர் முகம்மது யாஸின், மவ்லவி.JS.ரிபாயி, சமுதாய பிரமுகர் மெளலா.நாசர், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் தென்னரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் sk.வேதரத்தினம், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி, PVK பிரபு,ஜமாத் தலைவர் ஜபருல்லாகான், முன்னாள் ஜமாத் தலைவர் KM KI நவாஸ்தீன் , மவ்லவி .சாகுல் ஹமீது ஹஜ்ரத் , இலக்கிய பிரமுகர் புயல்.குமார் உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 

முன்னதாக மணமகளின் தந்தையும், முஹம்மதியா அறக்கட்டளையின் நிறுவனமான முகம்மது அலி அவர்கள் அனைவரையும் வரவேற்று விருந்தளித்து சிறப்பித்தார். தோப்புத்துறையின் சிறப்புகளை கூறும் பாடல் ஒன்றை பாடகர்.ஹாஜா பாடியதும். மாணவிகள் திருக்குர்ஆன் வசனங்களை ராகத்துடன் வாசித்ததும் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.