ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
மார்ச் 7 ஆம் தேதி அரியலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல்வங்கக் கடல் பகுதி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.