sdf

தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்னும் சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment