Skip to main content

"தமிழக மக்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்..." முதல்வர் உருக்கமான வேண்டுகோள்!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதையும் தாண்டி தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக முதல்வர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக மக்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். நோய்த் தொற்று பரவ காரணமாக இருந்துவிடாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம்” - முன்னாள் அமைச்சர் சீனிவாசன் 

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Lets make Stalin Chief Minister again in Tamil Nadu says Former Minister Srinivasan

 

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் நாகல் நகரில் இன்று ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்” என உளறி கொட்டினார். இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லவே பின்னர் மீண்டும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் பேசுகையில், “நான் மாற்றி சொல்லி விட்டேன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவோம்” என கூறினார்.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் கண்ணன், மாநகர எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், நெப்போலியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பரமசிவம், தேன்மொழி உள்பட கட்சி பொறுப்பாளர்கள்  500க்கு மேற்பட்ட  ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

ஆஜரான ரவீந்திரநாத்; வனத்துறை விசாரணை

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

nn

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி இரண்டு வயது சிறுத்தை புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வனப்பாதுகாப்பு அலுவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய அந்த சிறுத்தை புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது.

 

இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்கு தற்காலிக கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், ‘நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிக கிடை அமைத்தவரை கைது செய்வதா?' என கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் வனத்துறை தங்களை காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி  ஓ.பி.ரவீந்திரநாத்தின் நிலத்தின் மேலாளர்கள் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வந்தனர்.

 

இந்த விவகாரத்தில் தோட்டத்தின் உரிமையாளரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் உள்ளிட்ட மூன்று பேருக்கு வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் தோட்டத்தின் மேலும் 2 உரிமையாளர்கள் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகிய மூன்று பேரும் சம்மன் கிடைக்கப்பட்ட இரண்டு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் தேனி வனச்சரக அலுவலகத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தற்பொழுது ஆஜரான நிலையில் அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.