Skip to main content

என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்!" - கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்த இந்திய தேசிய லீக் நிர்வாகிகள்!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

சிவகாசியில்  தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியை இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் மற்றும்  இஸ்லாமிய சமுதாயத்தினர் நேரில் சந்தித்து குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்க அறிக்கை  வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.

நாடு முழுவதிலும் குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும், அப்படி பாதிக்கப்படும் பட்சத்தில் முதல் ஆளாக நானே நின்று தடுப்பேன் எனவும் தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தெளிவான அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

 

We will support you forever! " - Indian National League executives meeting KD.Rajendrapalaji!

 

இந்த நிலையில் , சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியை அவரது வீட்டில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து குடியுரிமைச் சட்டம் தொடர்பான விளக்க அறிக்கையைக் கொடுத்தனர். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமையில் அந்தக் கட்சி நிர்வாகிகள் அமைச்சரைச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

அப்போது, இஸ்லாமிய சமுதாயத்தினரின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்று இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகளிடம் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.  அதற்கு,  "சிவகாசியில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளீர்கள். பாதுகாப்பாக இருந்துள்ளீர்கள்.  உறவு முறை கூறி எங்களுடன் பழகிவந்துள்ளீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் எங்களை விட்டு உங்களைப் பிரிக்க முடியாது. என்றும்  உங்களுக்கு ஆதரவாக இருப்போம்.  இஸ்லாமியர்களின் கோரிக்கையை தமிழக முதல்வரி்ன் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்." என்று அமைச்சரிடம்  அவர்கள் தெரிவித்தனர்.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அமைச்சரிடம் கொடுத்த மனுவில்,


 

We will support you forever! " - Indian National League executives meeting KD.Rajendrapalaji!

 

'தமிழக முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும் தமிழக வரலாறோடு இரண்டறக் கலந்த ஒன்றாகும். தமிழக முஸ்லிம்கள் 15-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய தொண்டு வரலாற்றுப் பதிவு ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்களின் பங்கு கால ஏடுகளில் செதுக்கப்பட்ட ஒன்றாகும்.  இந்த நிலையில்,  மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தமிழக முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  வட இந்தியாவில், குறிப்பாக அசாம் மாநில சூழ்நிலையை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும், முஸ்லிம்கள் நீங்கலாக என்ற சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது.  

 

We will support you forever! " - Indian National League executives meeting KD.Rajendrapalaji!

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு ஆதரவு நிலை இருந்தாலும் அகில இந்திய அளவில் அதற்கான எதிர்ப்பு  ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குடியுரிமை திருத்தச்  சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.  மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் குடியுரிமை பதிவேட்டின் (என் ஆர்சி) தேவையின்மை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர் சி) செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட மாட்டாது என்று தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும்.  நடக்கவிருக்கும் 2020, 2021 -ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தேசிய மக்கள் பதிவேடு மேம்படுத்துதல் என்ற அச்சம் செயல்படுத்தப்படமாட்டாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். எங்களது கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்ய வேண்டும் என, பல்வேறு விரிவான தகவல்கள் அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்து ஆதரவு நிலை எடுத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசி வரும் நிலையில், இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் அவரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருப்பது,  அரசியல் ரீதியிலான மத நல்லிணக்கத்துக்கு வழிவகுப்பதாக, சமூக நோக்கர்களால் பேசப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.