Skip to main content

தமிழகத்தில் இனிமேல்தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கும்; நீங்களா நாங்களா பார்ப்போம்- ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதில்!!

Published on 23/12/2018 | Edited on 23/12/2018
kk

 

இன்று விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடி சாடிஸ்ட் மனப்பான்மை கொண்ட பிரதமர் எனவேதான் கலைஞர் சிலை திறப்பு விழாவில் அவரை சாடிஸ்ட் பிரதமர் என்று கூறினேன். புயலால் பாதித்த தமிழக மக்களுக்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத பிரதமரை சாடிஸ்ட் பிரதமர் என்று சொல்வதில் என்ன தவறு. எனவே தற்போது உறுதியாக அதே நிலையில் இருக்கிறேன். பிரதமர் மோடி  சாடிஸ்ட் பிரதமர் என கூறியிருந்தார். ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை அமைந்தகரையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில்,

 

மதுரையில் மீனாட்சி அம்மன் பெயர் புகழ் எப்படி இருக்கிறதோ அதேபோல் மதுரையில்  சாமானியர்களுக்கு சேவை செய்ய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை ஓங்கி நிற்கும். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மோடி அவர்கள் புயலுக்கு தமிழக மக்களுக்கு எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்று தொடர்ச்சியாக பொய் பேசி வருகிறார். எனது ட்விட்டர் பக்கத்தில் நான் சொல்லியிருந்தேன் ''உயிரிழந்த தமிழக மக்களின் குடும்பத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்'' என்று தெளிவாக மோடி பதிவிட்டு இருக்கிறார். முதலமைச்சரிடம் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்கிறேன் என உறுதியளித்து இருக்கிறேன் என சொன்னதையும் மறைத்து... மறைத்து... ஒரு பொய்யை ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

இன்னொன்றையும் அவர் சொல்கிறார். தமிழகத்தில் ஏதோ பாஜகவை ஒழித்துவிட்டேன் என கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே தமிழகத்தில் இனிமேல்தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கும் நீங்களா நாங்களா என்று பார்க்கத்தான் போகிறோம். எங்களை ஏதோ ஒழித்து விடலாம் என எண்ணாதீர்கள்.  உங்களால் தமிழகத்திலேயே யாரையும் எதிர்கொள்ள முடியாது. இதில் அகில இந்திய அளவில் எப்படி எதிர்கொள்வீர்கள். அகில இந்திய கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் ஸ்டாலின் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததை  ஏற்றுக் கொள்ளாமல் எல்லோரும் பின்வாங்கி விட்டார்கள். இவர் முன்மொழிய முன்மொழிய எல்லோரும் பின்வாங்கி கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழகத்தில் பாஜகவை இவர் ஒன்றும் ஒடுக்கவும் முடியாது அடக்கவும் முடியாது.

 

ஏற்கனவே பாஜக போன பாராளுமன்ற தேர்தலில் 19.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் கூட்டணியா அல்லது நாங்களா என்று பார்த்து விடுவோம். எனவே சும்மா பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. சாடிஸ்ட் பிரதமர் என்று  நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். மக்கள் அப்படி நினைக்கவில்லை. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சாடிஸ்ட் மனப்பான்மை கொண்ட சோனியா காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு பிரதமரை சாடிஸ்ட் பிரதமர் என சொல்கிறார் எனவே அவர் இனி  சாடிஸ்ட் ஸ்டாலின் எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.