Skip to main content

2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

2.0

 

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 2.0. விரைவில் வெளியாக காத்திருக்கும் இந்த படத்தை இணையத்தில் வெளியிடப்போவதாக தமிழ் ராக்கரஸ் ட்விட்டரில்  மிரட்டல் விடுத்துள்ளது

சார்ந்த செய்திகள்

Next Story

சம்பளம் தராமல் இழுத்து அடிக்கும் ரஜினி படக்குழு- ட்விட்டரில் புலம்பும் பிரபலம்

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

2.0 படத்தில் சப் டைட்டில் எழுதியதற்கு இன்னும் எனக்கு சம்பளம் தரவில்லை என்று பிரபல சப் டைட்டில் எழுத்தாளர் ரேக்ஸ் ட்விட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 

reks

 

 

எந்திரன் படத்தின் இரண்டாம பாகமான 2.0 படம் பல வருட போராட்டத்திற்கு பிறகு சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது. இதன்பின் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம், 3டி, சத்தம் அனைத்தும் செமையாக இருந்தது என்று இப்படத்திற்கு ஒரு கலவையான விமர்சனமே கிடைத்தது. ரஜினி, அக்‌ஷய் குமார் என இரு பெரும் நடிகர்கள் நடித்திருந்த படத்தின் வசூல் ரூ.800 கோடியை தொட்டது. தற்போது சீனாவில் மிகப்பெரிய அளவில் 2.0 படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
 

இந்நிலையில் இப்படத்தில் சப்டைட்டில் எழுத்தாளராக பணிபுரிந்த ரேக்ஸ், என்னுடைய முழு சம்பளத்தையும் தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  “படம் வெளியாகி பத்து மாதங்கள் வரை அவர்களுக்கான நேரத்தை நான் கொடுத்தேன் அதன்பின்னும் அவர்கள் எனக்கு சேரவேண்டிய பாக்கிய தரமுன் வரவில்லை. இதனையடுத்து நானே தயாரிப்பு நிறுவனத்திற்கு போன், மெசேஜ் மற்றும் மெயிலின் மூலம் தெரிவித்துள்ளேன் ஆனால் அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார். 
 

மேலும் அந்த பதிவில்,  “எந்திரன் படத்திலேயே பணிபுரிந்ததற்கு இன்னும் முழு சம்பளம் கொடுக்கவில்லை. அதை சரிபோகுது என்று விட்டுவிட்டேன். மீண்டும் இப்படி ஒரு செயல் நடக்கிறது” என்று தன்னுடைய ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

ரஜினி படம் வெளியாகுமா? சிக்கலில் தயாரிப்பு நிறுவனம்...

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0 . கடந்த வருடம் நவம்பர் மாதம் 28ஆம் தேதி இப்படம் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். 
 

2.o

 

 

500 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம், எதிர்பார்த்த வசூலை வாரிக்குவிக்காமல் போனது. இதனால் சீனாவில் ரிலீஸ் செய்யும்போது அதிக திரைகளில் வெளியிட்டு வசூலை வாரிக்குவித்துவிடலாம் என்று கணக்குப்போட்டது தயாரிப்பு நிறுவனம். சொன்னதைபோலவே சுமார் 56,000 ஸ்கிரீன்களில் இப்படத்தை அடுத்த மாதம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. தமிழ் படம் ஒன்று சீனாவில் வெளியாகுவது இதுவே முதல் முறை என்கிற சாதனையை படைக்க இருந்தார் ரஜினி. 
 

2.0 படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்தனர். ஹெச்ஒய் மீடியா நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த முடிவில் இருந்து அவர்கள் பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.காரணம், இதற்குமுன் சீன மொழியில் வெளியான ‘பேட்மேன்’ திரைப்படம், சீனாவில் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. 2.0 திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபகரமாக அமையும். ஆனால், 2.0 வெளியாகும் சமயத்தில் ‘தி லயன் கிங்’ படத்தையும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதால், படத்தை வெளியிட்டு நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, வெளியிடாமல் குறைந்த அளவு நஷ்டத்தைச் சமாளிக்கலாம் என்று அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அந்நிறுவனம் வெளியிடும் என்று தெரிகிறது.