Skip to main content

“மாவட்ட ஆட்சியர், அமைச்சர் வீடுகளில் நெல்லை கொட்டி போராட்டத்தை நடத்துவோம்” - விவசாயிகள் ஆவேசம்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

"we will  pouring paddy in the house District Collector, Minister" Farmers

 

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாகக் கொள்முதல் செய்யவில்லை என ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல்லை, அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்து கொட்டி, மாதக்கணக்கில் காத்திருக்கும் அவலமே நிலவிவருகிறது. முறையாகக் கொள்முதல் செய்யாததால் திடீரென ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி போராட்டத்திற்கு தள்ளியிருக்கிறது.


திருவாரூர் மாவட்டம் வடுவூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து கொட்டி, 1 மாதத்திற்கு மேலாகிவிட்டது. இதுவரையிலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை, என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசையும், உள்ளூர் அமைச்சரான உணவுத்துறை அமைச்சர் காமராஜையும், மாவட்ட ஆட்சியரையும் கண்டித்தனர். அப்போது, விவசாயிகள்  திடீரென நெல்லை சாலையில் கொட்டி படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

போராட்டத்தில் இருந்த விவசாயிகள் கூறுகையில், "உணவுத்துறை அமைச்சரான காமராஜ் எங்க ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர்தான். தினசரி ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்வதாகவும், விவசாயிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் வராதபடி எல்லா பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

 

Ad

 

ஆனால், உண்மையில் மாதக்கணக்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாமல் நெல்மணிகள் முளைத்துவிட்டது. ஆகவே இனியாவது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவேண்டும். இரண்டு நாட்களுக்குள் விவசாயிகள் கொண்டு வந்துள்ள அனைத்து நெல்லையும் உடனடியாகக் கொள்முதல் செய்யவில்லையெனில், விவசாயிகளை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பும், அமைச்சர் வீட்டின் மூன்பும் நெல் மூட்டைகளை கொட்டி குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம்." எனத் தெரிவித்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.