Skip to main content

' இனி ஓசியில் இடியாப்பம் தரமாட்டோம்...'-இளைஞர்களை போலீசார் தாக்கும் வைரல் வீடியோ!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

'We will not give Idiyappam in OC anymore ...' - Viral video of police attacking youths!

 

சென்னையை அருகே இடியாப்பம் தராததால் பட்டதாரி இளைஞர்ளை போலீசார் அடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றதாக காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் வசித்துவந்த பட்டதாரி இளைஞரான சிலம்பரசன் என்பவர் சக பட்டதாரி இளைஞர்களுடன் சேர்ந்து குரோம்பேட்டை ராதா நகர் பிரதான சாலையில் இடியாப்பம் புட்டு கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். அந்த கடைக்கு தினமும் வந்த சி 12 காவல் நிலையத்தை சேர்ந்த சுரேஷ் என்ற காவலர் காசு கொடுக்காமல் இடியாப்பம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிலமுறை வாங்கி சென்ற இடியாப்பத்திற்கு காசு தராதது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இனி ஓசியில் இடியாப்பம் தர முடியாது என அந்த இளைஞர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் சென்றபோது அவர்கள் மதுபோதையிலிருந்ததாக போலீசார் நிறுத்தியுள்ளனர். அப்பொழுது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் போலீசார் தாக்கியதோடு காவல் நிலையம் அழைத்து சென்று சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. ஓசியில் இடியாப்பம் கேட்டு தராததால் போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தாக்கியதாக இளைஞர்களின் நண்பர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றதை கேட்ட போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதால் இருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.