Skip to main content

' இனி ஓசியில் இடியாப்பம் தரமாட்டோம்...'-இளைஞர்களை போலீசார் தாக்கும் வைரல் வீடியோ!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

'We will not give Idiyappam in OC anymore ...' - Viral video of police attacking youths!

 

சென்னையை அருகே இடியாப்பம் தராததால் பட்டதாரி இளைஞர்ளை போலீசார் அடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றதாக காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் வசித்துவந்த பட்டதாரி இளைஞரான சிலம்பரசன் என்பவர் சக பட்டதாரி இளைஞர்களுடன் சேர்ந்து குரோம்பேட்டை ராதா நகர் பிரதான சாலையில் இடியாப்பம் புட்டு கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். அந்த கடைக்கு தினமும் வந்த சி 12 காவல் நிலையத்தை சேர்ந்த சுரேஷ் என்ற காவலர் காசு கொடுக்காமல் இடியாப்பம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிலமுறை வாங்கி சென்ற இடியாப்பத்திற்கு காசு தராதது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இனி ஓசியில் இடியாப்பம் தர முடியாது என அந்த இளைஞர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் சென்றபோது அவர்கள் மதுபோதையிலிருந்ததாக போலீசார் நிறுத்தியுள்ளனர். அப்பொழுது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் போலீசார் தாக்கியதோடு காவல் நிலையம் அழைத்து சென்று சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. ஓசியில் இடியாப்பம் கேட்டு தராததால் போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தாக்கியதாக இளைஞர்களின் நண்பர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றதை கேட்ட போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதால் இருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது