Skip to main content

“இந்த மூன்று பேரைப் பற்றி தவறாக யார் பேசினாலும் அமைதியாக இருக்க மாட்டோம்” - பாமக அன்புமணி எச்சரிக்கை

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

"We will not be silent if anyone speaks ill of these three people" - Pmk Anbumani warned

 

'தந்தை பெரியாரைப் பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாகப் பேசக்கூடாது. பேசினால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம்' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தமிழக முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து விட்டார்கள். பீகாரில் அறிவித்து அதனை எடுத்து, அதை முடித்து, அதனுடைய முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள். நேற்று முன்தினம் அது சம்பந்தமாக பீகார் மாநிலத்தில் 65 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் உயர்த்துவோம் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. மொத்தம் 75 விழுக்காடு இட ஒதுக்கீடு பீகார் மாநிலத்தில் வரப்போகிறது. சமூக நீதி.. சமூக நீதி... என்று பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. உங்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மனசு இல்லை என்றால் சமூக நீதி பற்றி பேசாதீர்கள். சமூக நீதி மாநாடு நடத்தாதீர்கள். இது அவசியமானது நிச்சயமாக செயல்படுத்த வேண்டும் இதை செயல்படுத்தவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டம் நடத்தும்.

 

தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக இருக்கின்ற மதுக்கடைகள் 5000. ஆனால் சந்து கடை 25 ஆயிரம் கடை இருக்கிறது. அதிக சந்து கடை எங்கு இருக்கிறது தெரியுமா? தர்மபுரியில் தான் இருக்கிறது. சந்து சந்தா கடை இருக்கின்ற சூழலில் 10 வயசு,12 வயசு பிள்ளைகள் எல்லாம் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ரொம்ப மோசமாக இருக்கிறது. ஒரு பக்கம் மது, ஒரு பக்கம் போதை பொருள் என ஒரு தலைமுறையே போய்விட்டது. தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள். அதனால் இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். போதை ஒழிப்பு காவல்துறைக்கு கூடுதலாக 18,000 காவலர்களை நியமனம் செய்ய வேண்டும்'' என்றார்.

 

அண்ணாமலை பெரியார் சிலை குறித்துப் பேசியது தொடர்பான கேள்விக்கு, ''இது தந்தை பெரியாருடைய மண். இந்த மண்ணில் இப்படி எல்லாம் பேசக்கூடாது. தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடையாது. அவர்தான் சமூக நீதியை இந்தியாவிற்கு தொடங்கி வைத்தவர். தந்தை பெரியாரைப் பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. பாமகவின் முன்னோடிகளாக மூன்று பேரை வைத்துள்ளோம். ஒன்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் இந்த மூன்று பேரை பற்றி யாராவது தவறாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்