Skip to main content

தமிழிசையை குடியரசு தலைவர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் - ரவிக்குமார் உறுதி

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

ரதக


குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக தமிழிசை நிறுத்தப்பட்டால் அவரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் ஜூலை மாதம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல் முடிந்ததும் இதற்கான ஏற்பாடுகள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய அரசு குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த தமிழிசையை வேட்பாளராக அறிவிக்க இருக்கிறது என்ற ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், பலரும் இந்த தகவலை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய வி.சி.க எம்.பி ரவிக்குமார், "தமிழிசை ஒருவேளை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஏற்க மாட்டோம். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக அல்லாத வேறு ஒரு நல்ல வேட்பாளரை தமிழக முதல்வர் குடியரசு தலைவர் தேர்தலில் முன்மொழிய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பு சாசன சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்'' -ரவிக்குமார் எம்.பி பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

'' Ambedkar is the creator of the largest constitutional law in the world '' Ravi Kumar MP speech!


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மொழிப்புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் விழாவைத் துவக்கி வைத்துப் பேசினார்.

 

சிறப்பு விருந்தினராக விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிப் பேசுகையில், ''இந்த பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்காக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தைச் சிதம்பரத்தில் தான் அமைக்க வேண்டும் என்று 1933-ஆம் ஆண்டு அப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்த சுவாமி சகஜானந்தா, பல்கலைக்கழகம் அமைக்க இடத்தை பார்வையிட வந்த குழுவினரிடம் வலியுறுத்தியதன் பேரில் இங்கு தமிழுக்காக இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில், ''அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் அமைக்கும் அமர்வுக்கு வருவதற்கு பல்வேறு போராட்டங்களையும் இன்னல்களையும் கடந்து வந்துள்ளார். எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. அப்படி வந்தவர் அமர்வுக்குத் தலைவரானார். உலகத்திலே மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து வழங்கியுள்ளார். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி வழங்கிய இந்த நாளை போற்றி உறுதியேற்போம்'' என அவர் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன், பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய முதல்வர்  ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வாறு குரல் கொடுத்துள்ளார் என்பதை விளக்கிப் பேசினார்கள்.

 

பல்கலைக்கழக  அம்பேத்கர் இருக்கையின் சார்பில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்-2021 தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டி போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் சௌந்தரராஜன் ,துணை பேராசிரியை.ராதிகாராணி செய்திருந்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழக புல முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

 

 

Next Story

“திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது..” - மத்திய அரசை சாடிய ரவிகுமார் எம்.பி. 

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Ravikumar MP Tweet about PM Cares PSA Plant

 

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 35 மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அக்.07 காலை உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 

 

Ravikumar MP Tweet about PM Cares PSA Plant

 

தமிழ்நாட்டில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அதேபோல், தேனி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் திறக்கப்பட்டன. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை எம்.பி. ரவிகுமார் திறந்துவைத்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திறந்து வைத்த கொள்கலன்களில் பி.எம். கேர் நிதி கீழே ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் பி.எம். கேர்ஸ்-க்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இது யாருடைய நிதி? விளக்கம் தருமா ஒன்றிய அரசு?” என்று பதிவிட்டுள்ளார்.