Skip to main content

8 வழிச்சாலைக்கு நாங்களே பூட்டுப் போட்டுவிடுகிறோம்: அமைச்சர் உதயகுமார்

Published on 23/07/2018 | Edited on 23/07/2018


சேலம் - சென்னை இடையே அமையவிருக்கும் 8 வழிச்சாலையை பயன்படுத்தி பாருங்கள். மக்களுக்கு அது பிடிக்கவில்லையெனில் நாங்களே அதற்கு பூட்டுப் போட்டுவிடுகிறோம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், கப்பலூரில் தொழிலதிபர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், “இன்று தமிழகத்தில் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கின்றனர். சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டுகின்றனர். இந்தியாவில் 8 வழிச்சாலை மும்பை - புனே இடையே ஒரே இடத்தில்தான் அமைந்துள்ளது.

 

 

அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில்தான் ரூ.10 ஆயிரம் கோடியில் இத்திட்டம் அமையவுள்ளது. முதலில் 8 வழிச்சாலையை பயன்படுத்தி பாருங்கள். அதன்பின் அது பிடிக்கவில்லையெனில் நாங்கள் அதற்கு பூட்டுப்போட்டு விடுகிறோம். மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

ரூ10,000 கோடியில் அமையுள்ள சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் பற்றி அமைச்சர் உதயகுமார் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

''எட்டு வழிச்சாலை... நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும்''-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி! 

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

"Eight-lane highway... should be done by acquiring the land"- Minister AV Velu interviewed!

 

'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர் பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது. நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை நாங்களே போட்டிருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

 

சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும். நீங்கள் போகும் வண்டி, நான் போகும் வண்டி என நாளுக்குநாள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்பொழுது என்ன செய்ய முடியும் சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்பொழுது நிலத்தை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறார் சம்பந்தப்பட்ட மந்திரி சாலை போட வேண்டும் என்று சொல்கிறார் என்று எங்கேயாவது நிரூபியுங்கள்'' என்றார்.

 

 

Next Story

'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை!  

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. 277 கிலோமீட்டர் தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சேலத்திலிருந்து சென்னை வந்தடையும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சேலம் பகுதியில் விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விவசாயிகளின்  எதிர்ப்பை மீறி பலரின் நிலங்களைச் சாலைக்காக கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. மேலும், 8 வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த விவகாரம். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (16.02.2021) சென்னை வந்தார். இதுதொடர்பாக நேற்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டார். 'விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 6 வழிச்சாலை போடப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை அமையவுள்ள சேலம், வீரபாண்டி ஒன்றியத்தை ஒட்டியுள்ள பூலாவரி பகுதி மக்கள் 'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம். 8 வழிச் சாலையானாலும் சரி, 6 வழிச் சாலையானாலும் சரி, எதற்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்' என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் பேசுகையில், 'முதலில் 8 வழிச்சாலை என்றார்கள், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று 6 வழிச்சாலை என்கிறார்கள், இது ஏமாற்று வேலை. 8 வழிச்சாலை போடத்தான் இவ்வாறு கூறி வருகிறார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே சாலைக்காக நிலத்தை அபகரிக்கச் செய்யும் முயற்சி' என்றனர்.