Skip to main content

'எங்க ஊருக்கு டாஸ்மாக் வேணும்' - முற்றுகையிட்டு மனு கொடுத்த குடிமகன்கள்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

 'We want Tasmac for our town' - Citizens petitioned by laying siege

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெண்கள், பொதுமக்கள் போராடி டாஸ்மாக் கடையை மூடி வைத்த நிலையில் குடிமகன்கள் ஒன்று சேர்ந்து டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கை மனு அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆரணி படவேடு சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்தது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை இருப்பது பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்துகிறது எனப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புகார் மனு அளித்து அந்தக் கடையை அகற்றினார்கள்.

 

இதற்கு இடையே விநாயகபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் இடம் ஒன்றைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை அறிந்த கிராம பெண்கள் மற்றும் ஊர்மக்கள் என 50க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் ஜெகதீசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் சேர்ந்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் எனக் கூறி மனு அளித்தனர். டாஸ்மாக் கடையில்லாததால் அரசுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், நாங்கள் மது அருந்த அருகில் உள்ள களம்பூர் பகுதிக்கு சிரமப்பட்டு செல்வதாகவும் கூறி டாஸ்மாக் கடை திறக்கக் கோரி வலியுறுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.