Skip to main content

நாங்கள் பிரிட்டிஷ் போலிஸ் என்கிறார்கள். – சிபிஎம் உ.வாசுகி கோபம்.

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
salem 8 way

 

 

 

சேலம் – சென்னை வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்மென இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 1ந்தேதியான இன்று திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு, என் நிலம் – என் உரிமை என்கிற பெயரில் நடைபயணம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மூன்றாயிரத்துக்கும் அதிகமான சிபிஎம் தொண்டர்கள், விவசாயிகள், பெண்கள் என வருகை தந்துயிருந்தனர். 8 வழிச்சாலையை எதிர்த்தும், அதனை செயல்படுத்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும், தமிழக அதிமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

 

 

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசும்போது, அரசை விமர்சிக்ககூடாது, மாற்று கருத்துக்கூறக்கூடாது, வாய் மூடிக்கிடக்க வேண்டும், ஒருங்கிணைந்து செயல்படக்கூடாது என்கிறது போலிஸ். இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது. வெளியாட்கள் வரக்கூடாது என்கிறார்கள். நாங்கள் என்ன செவ்வாய் கிரகத்தில் இருந்து வருகிறோமா அல்லது அமெரிக்காவில் இருந்து வருகிறோமா. பக்கத்து மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவு தர வருகிறோம். நாங்கள் வரக்கூடாது எனச்சொல்ல நீங்கள் யார்?,

 

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது மோடிக்கும், எடப்பாடிக்கும் தெரியாதா?. முடியாட்சி போல் ஆட்சியை நடத்துகிறார்கள். அதை என்றும் இந்த செங்கொடி தோழர்கள் ஏற்கமாட்டார்கள். எங்கள் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சங்கர், விவசாயிகளை சந்திக்க கட்சி நிர்வாகிகளுடன் உத்திரமேரூர் சென்றபோது, காஞ்சிபுரம் ஏடிஎஸ்.பி நீ உள்ளே வரக்கூடாது என்றுள்ளார். உள்ளே வரக்கூடாது எனச்சொல்வதற்கு நீங்கள் என்ன பிரிட்டிஷ் கால போலிஸ்சா எனக்கேட்டபோது, ஆமாம் நாங்கள் பிரிட்டிஷ் கால போலிஸ் தான் என மிரட்டியுள்ளார். மோடியும், எடப்பாடியும் கார்ப்பரேட்களுக்காக வேலை செய்கிறீர்கள். உங்களின் கனவை நாங்கள் கலைப்போம் செங்கொடி ஏந்தும் நாங்கள் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.