Skip to main content

“அவர் எப்படி முதல்வர் ஆனார் என்று நமக்குத் தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

"We know how he became chief minister" - Udayanithistalin

 

கரூர் மாவட்டத்திற்கு "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், காலை நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், செல்லும் வழிகளில் விவசாயிகளை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

கரூர் தொகுதியில் மாலை பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா மற்றும் தாந்தோணிமலை பகுதிகளுக்கு வருகைதந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராயனூரில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அவர், “முக்கியமான நேரத்தில் இளைஞரணிக் கூட்டம், இன்னும் ஒரு சில மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. நிச்சயமாக கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபட வேண்டும். கடந்தமுறை அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற வைத்து, இந்திய அளவில் 3வது பெரிய கட்சியாக அங்கீகாரம் கொடுத்தீர்கள். 2 மாதத்தில் நீங்கள் நேரடியாக மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும். 

 

மோடி 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நாடாளுமன்ற வளாகம் கட்டுகிறார். சொகுசு விமானம் வாங்குகிறார். அவை அனைத்தும் மக்களுடைய வரிப்பணம். முதல்வர் படிப்படியாக வளர்ந்து முதலமைச்சர் ஆனதாகச் சொன்னார். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்று நமக்குத் தெரியும். அதைப் பற்றி பேசியதால், என்மீது 4 வழக்குப் போட்டு இருக்கிறார்கள். மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன், அந்தம்மா காலை பிடித்துத் தான் முதலமைச்சர் ஆனார். ஆனால், தற்போது அந்தம்மா காலையும் கவிழ்த்து விட்டார்கள்.

 

"We know how he became chief minister" - Udayanithistalin

 

மீன் வளத்துறை அமைச்சர், மீன் வளத்துறையைத் தவிர மற்ற எல்லாத்துக்கும் கருத்துச் சொல்லுவார். சசிகலா குறித்து கருத்து கேட்டபோது சொல்ல மறுக்கிறார். சென்னையில் ஜெயலலிதா சமாதிக்கு வந்தவர்கள் அனைவரும் கலைஞர் சமாதியைப் பார்த்து விட்டுச் சென்றனர். என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள் மங்குனி அமைச்சர்கள். விஜயபாஸ்கரை பாமாயில் பாஸ்கர் என மக்கள் கூப்பிடுகிறார்கள். அவர் வகிக்கும் துறையில் கோடிக் கணக்கில் ஊழல்செய்துள்ளார். இரண்டரை வருசமா இந்த அமைச்சர்கள் எங்கு பார்த்தாலும் ஊழல் செய்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு ஆளுநரிடம் புகாராகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இன்னும் 2 மாதம் முக்கியமான நாட்கள். பல்வேறு பகுதிக்குச் செல்லும் போது பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். இந்தியாவிலேயே இளைஞரணி ஆரம்பித்தது நம் கட்சிதான். கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதியில் 14 ஆயிரம் நிர்வாகிகள் பதவி போட்டுக் கொடுத்து இருக்கிறோம். விரைவில் முரசொலியில் பெயர் பட்டியல் வெளிவரும். மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்துததுடன், அவற்றை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். 

 

55 தொகுதியில் பிரச்சாரம் பன்னிட்டேன், 234 தொகுதியிலும் வெற்றிபெறுவது உறுதி. தொடர்ந்து சி.எஸ்.ஐ மைதானத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்தில் பேசிய அவர், ஐடி விங் கரோனோ காலகட்டத்தில் நன்றாகச் செயல்பட்டது. இணையத்தில் சிறப்பாகச் செயல்பட ஐ.டி விங்க் உதவியாக இருக்கிறது. அதிமுக, பா.ஜக சார்பில் போடப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும். 2 மாதத்திற்கு தூக்கம் பாராமல் உழைத்து ஆட்சியில் அமர வைக்க உழைக்க வேண்டும். திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும். 

 

பாஜக மீதும், அதிமுக மீதும் கடுமையான அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து ரத்து வாங்கித் தருவீர்களா என்று மாணவிகள் கேட்டார்கள். தலைவர் கண்டிப்பாக ரத்து செய்துகாட்டுவார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை கேட்டது நம் தலைவர். அதை மூடி மறைக்கப் பார்த்தார்கள். தற்போது அதிமுக பொறுப்பாளர்களைக் கைதுசெய்து இருக்கிறார்கள். அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மோடியிடம் விற்றுவிடுவார்கள். 2 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும், தலைவர் முதல்வர் ஆவார்" என்றார்.

 


சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழுக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் முதல் எதிர்க்குரல் அவருடையதுதான்'-அமைச்சர் காந்தி பேச்சு

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
'The Chief Minister is the first voice against whoever raises a question against Tamil' - Minister Gandhi speech

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செய்தார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி தெரிவிக்கையில், 'பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் தமிழ் மொழிக்காக எவ்வாறு பாடுபட்டர்களோ அதை மிஞ்சும் அளவுக்கு தமிழக முதல்வர் செயலாற்றுவதாகவும் தமிழ் மொழிக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் அதனை முதலில் எதிர்த்து குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய திட்டங்களை அறிவித்து இந்தியாவிலேயே முன் மாதிரியான முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார்.தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை மிஞ்சும் அளவிற்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். விளையாட்டுத்துறை என ஒரு துறை இருந்ததே யாருக்கும் தெரியாது. தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு விளையாட்டுத்துறை தற்போது மேலோங்கி வளர்ந்துள்ளது.

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது' என தெரிவித்தார்.

Next Story

“நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற உழைத்திட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Minister Udayanidhi says that we have to work hard to win the parliamentary elections

“நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உழைத்திட வேண்டும்” என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.  

திருச்சியில் கலைஞர் சிலையை காணொளி காட்சி மூலம் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், “சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் எனது நன்றி. மாநாட்டை வெற்றி மாநாடாக செய்து காட்டிய கே.என். நேருவிற்கு நன்றி. கே.என். நேருவின் உழைப்பை பார்த்து நான் வியந்து போகிறேன். திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இதுவரை 76 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.  திருச்சி தெற்கு மாவட்டம் முதன்மையாக உள்ளது.   

ad

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் விளையாட்டு போட்டிகள், கலைஞர் சிலை திறப்பு விழா, அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திருச்சி தெற்கு மாவட்டம் விளங்குகிறது. எனவே தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். திருச்சியில் கலைஞர் சிலையை திறந்தது எனக்கு பெருமையாக உள்ளது.

கலைஞரை முதன் முதலில் எம்எல்ஏ ஆக்கியது திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதிதான். அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் கலைஞர் வெற்றி பெற்றார். கலைஞருக்கு பிடித்த ஊராக திருச்சி விளங்கியது.  திருச்சி கல்லக்குடி போராட்டம் தமிழக வரலாற்றில் முக்கியமான போராட்டமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சி மாவட்டத்தில் கலைஞர் சிலை திறப்பது பெருமைக்குரிய விஷயம். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி ரயில் நிலையத்தில் தீக்குளித்து தமிழுக்காக தனது உயிரை அர்ப்பணித்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். இந்த வீரவணக்க நாளில் சிலை திறப்பு நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய விஷயம்.

Minister Udayanidhi says that we have to work hard to win the parliamentary elections

பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகள் சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது.  தலைவர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் தான் சிலைகள் திறக்கப்படுகிறது. திமுக தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்த இடம் திருச்சி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெற வேண்டும்.  அதற்காக ஒவ்வொருவரும் உழைத்திட வேண்டும்” என்றார்.