Skip to main content

கோவில் இருக்கு, இங்கு பள்ளிக்கட்டிடம் கட்டக்கூடாது!!! இந்து முன்னணியினர் கூறியதால் பரபரப்பு

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

we have temple  so will not allow to build school here

 

 

கோட்டூர் அருகே பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளிக்கான புதிய  கட்டிடம்  கட்ட நிதி ஒதுக்கப்பட்டு  பணிகள் துவங்க இருந்த நிலையில் கோவில் உள்ள பகுதி எனக்கூறி பள்ளி கட்டாமல் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் தடுத்ததால் பரபரப்பு 

 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர்விக்கிரபாண்டியம் அருகில் உள்ள காாியமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த தொடக்க பள்ளி கடந்த  கஜா புயலின்போது காற்றில் சேதமடைந்து பயன்படுத்த முடியாதநிலைக்கு மாறியது. அதே இடத்தில் தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டிட பணிகள் இன்று துவங்கப்பட்டது. 

 

அங்குவந்த அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் இந்த இடத்தில் பள்ளிகட்டிடம் கட்டகூடாது நாங்கள் சொல்லும் வேறு இடத்தில் தான் கட்ட வேண்டும் என்று தடுத்தது நிறுத்தி முரண்டுபிடித்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகி போலீஸார் குவிக்கப்பட்டது. அங்கு இருந்த அதிகாரிகளோ, "அரசு நிதி ஒதுக்கியுள்ள இந்த இடத்தில்தான் புதிய கட்டிடம் கட்டுவோம்" என தெரிவித்தனர், இந்து முன்னணியினரோ, "இங்கு கட்டிடம் கட்டக்கூடாது, அருகாமையில் கோயில் இருக்கிறது. அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் வந்தால் கோயிலுக்கு இடையூராக இருக்கும் எனவே நாங்கள் சொல்லும் வேறு இடத்தில்தான் கட்டவேண்டும்," என இந்து முன்னணியினர்  போலீசாரிடமும்,  அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு ஆர்.டி.. தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பிறகு பள்ளி கட்டிடத்தை கட்ட முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து  அனைவரும் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.