Skip to main content

“உசுரை வெறுத்துதான் இந்த ஆபத்தான வேலைக்கு வந்திருக்கிறோம்” - வேதனை குரலில் அரசுக்கு கோரிக்கை வைக்கும் இரண்டு பெண்கள்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government
                                                              கலையரசி

 

தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவில் பகுதியில் ஒரு தகவல் விசயமாக நாம் சென்றுகொண்டிருந்தபோது நகரின் ஒதுக்குப்புறத்திலுள்ள உயரமான ட்ரான்ஸ்ஃபார்மரின் அருகே நின்றிருந்த சிலர் அதன் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நமக்கும் பொறி தட்ட, தற்செயலாக மேலே பார்த்தபோதுதான் ட்ரான்ஸ்பார்மரின் உச்சியில் 2 இளம்பெண்கள் மின்வயர் இணைப்பு பணியை அநாயாசமாய் செய்துகொண்டிருந்ததைப் பார்த்த நமக்கு வியப்பு தாங்கவில்லை. ஆண்கள் மட்டுமே ஈடுபடும் இந்த மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழிலில் அவர்களுக்கு இணையாக 2 பெண்கள் அந்தரத்தில் மின் இணைப்பு பணியை செய்துகொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நாம், அவர்கள் வேலையை முடித்துவிட்டு கீழே இறங்கும்வரை காத்திருந்தோம். சில மணித்துளிகளில் வேலையை முடித்தவர்கள், சரசரவென்று இறங்கி ட்ரான்ஸ்ஃபார்மரில் மின் சப்ளையைக் கொடுத்துவிட்டு நின்றிருந்த அந்த இரண்டு இளம்பெண்களிடமும் நாம் பேசினோம்.

 

அந்தரத்தில் ஆண்களே செய்யத் தயங்கும் இந்த மின்இணைப்பு பணியைத் துணிச்சலாக நீங்கள் செய்தது சாலையில் சென்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. எந்தச் சூழ்நிலையில் அபாயகரமான இந்தப் பணிக்குப் நீங்கள் வர நேர்ந்தது என்று கேட்டபோது, அவர்கள் வெளிப்படுத்திய பின்னணி வெலவெலக்க வைத்தது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் கலா பார்வதி மற்றும் கலையரசி. வாழ்க்கைச் சூழலின் விளிம்புநிலை பிரிவைச் சேர்ந்த அந்த இரண்டு இளம்பெண்களும் எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். இவர்களில் கலா பார்வதியின் தாய் ராமு. தந்தை 6 வருடங்களுக்கு முன்பே காலமாகியிருக்கிறார். இவரோடு பிறந்த 5 பேர்களும் வாழ்க்கையில் செட்டிலாகி வெவ்வேறு பகுதியில் இருப்பவர்கள். 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான கலா பார்வதி, கணவனுடன் 3 வருடங்கள் மட்டுமே குடித்தனம் நடத்தியிருக்கிறார். அதன் பிறகு கணவன் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுக்க, அதன் காரணமாக கணவரைப் பிரிந்துவந்த கலா பார்வதியை அவரது தாயும் உடன் பிறந்தவர்களும் ஏற்க மறுத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்கள். ஒண்டியாய் வெளியே வந்த கலா பார்வதிக்கு வாய்க்கும் கைக்கும் போராட்டம். வறுமையை சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். 

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government
                                                             கலா பார்வதி

 

இந்தச் சூழலில் கோவில்பட்டி மின்சாரத்துறை, கேங்க்மேன் பணிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்தது. துணிச்சலாக அந்தப் பணிக்குச் சென்றிருக்கிறார் கலா பார்வதி. அங்கு ஆண்களே அதிகமாக வர, பெண்கள் 5 பேர் மட்டுமே வந்திருக்கின்றனர். அந்த சமயம் 30 அடி உயரமுள்ள மின் கம்பத்தில் ஏறுகிற சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 5 பெண்களில் கலா பார்வதி மட்டுமே வெற்றிபெற, அடுத்து நடத்தப்பட்ட வயர் மடக்கும் பணியை குறிப்பிட்ட 30 நொடிகளுக்குள் செய்து முடிக்க முடியாமல் போகவே அவர் வெளியே வர நேர்ந்தது. இந்தச் சூழலில்தான் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கலையரசி என்கிற திருமணமாகாத இளம் பெண்ணும் கலா பார்வதியுடன் இணைந்திருக்கிறார். திருமணமாகாத கலையரசியின் உடன்பிறந்தவர்கள் இருவரும் வாழ்க்கையில் செட்டிலாகி வெளியூரில் இருப்பவர்கள். தந்தை மரணமடைந்துவிட, வயதான தாய் கனகராணியை கவனிக்க வேண்டிய இக்கட்டானச் சூழ்நிலையில் இருந்தவர் கலையரசி. வருமானத்திற்கு வழி இல்லாத நிலையில் குடும்ப வறுமையைச் சமாளிக்க தீப்பெட்டி வேலைக்குப் போன கலையரசிக்கு அந்த வருமானம் கட்டுபடியாகவில்லை. இந்த நிலையில்தான் கலா பார்வதியுடன் இணைந்த கலையரசி, நகரிலுள்ள மின்சாரத்துறை காண்ட்ராக்டர் ஒருவரிடம் வயர் மேன் வேலைக்குப் போயிருக்கிறார்கள். 

 

அந்த சமயம் கோவில்பட்டி இ.பி.யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இவர்கள் மின் கம்பத்தில் சரசரவென்று ஏறுவதைப் பார்த்து வியந்து, மின் தொடர்பான பணியில் ட்ரெய்னிங் எடுங்கள் என்று ஊக்கப்படுத்தியிருக்கிறார். ஆறே மாதத்தில் மின்சாரம் தொடர்பான கேங்மேன் மற்றும் வயர் மேன் பயிற்சியை இரண்டு பெண்களும் கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அதையடுத்து அந்த இ.பி. காண்ட்ராக்டர் மூலமாகவே அவர் எடுக்கிற இ.பி.யின் காண்ட்ராக்ட் பணியில் வயர்மேனாக ஈடுபட்டிருக்கிறார்கள். புதிய மின்கம்பம் நடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களின் உச்சியில் மின் வயர் இணைப்புப் பணிகளைச் செய்வது ஆகியவற்றை திறமையாக செய்திருக்கிறார்கள். 25 முதல் 30 அடி உயரம் வரையுள்ள மின் கம்பத்தில் அநாயாசமாக ஏறி அந்தரத்தில் மின் இணைப்பு பணியைத் அசத்தலாகச் செய்திருக்கிறார்கள். இதையடுத்தே இரண்டு பெண்களும் இ.பி.யின் 3 வருடத்திற்கான ஒப்பந்தப் பணியாளரானார்கள். புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைப்பது, உயர்ந்த மின்கம்பத்தில் வயர் இணைப்பு கொடுப்பது போன்ற பணிகளைப் பழுதின்றிச் செய்திருக்கிறார்கள். ஒப்பந்தப் பணியாளர்கள் என்றாலும் இவர்களின் தினக்கூலி 300 ரூபாய்தான். அதற்காகவே இத்தனை பெரிய ரிஸ்க்கான வேலையில் ஈடுபட நேர்ந்திருக்கிறது. 3 வருட ஒப்பந்தப் பணியில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் புதிப்பிக்கப்படுமாம். ஆனாலும் இந்தப் பணியின் கடைசி மூன்று மாத சம்பள பாக்கியும் வர வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government

 

மின் இணைப்புப் பணியில் ஆண்களுக்கு நிகராவும் அதே சமயம் வேலையை ஆண்களைவிட இவர்கள் வெகு விரைவாகச் செய்வதையறிந்த கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட அக்கம்பக்கம் நகரங்களிலிருக்கும் இ.பி. சப்ஸ்டேஷன்கள் தங்கள் பகுதியின் ஊழியர்கள், வயர்மேன்கள் பற்றாக்குறை காரணமாக கலா பார்வதியையும், கலையரசியையும் வரவழைத்து ஒப்பந்தப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இதுபோன்று மின்துறையின் பணிகள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கிடைக்க நேரிடும். ஆனாலும் தங்களின் வயிற்றுப்பாடு காரணமாக மின்சாரத்துறை அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருட அனுபவத்தில் வயர் மேன் தொழிலில் ஆண் பணியாளர்களையும் மிஞ்சும் அளவிற்குத் தேர்ந்த வயர்மேன் பணியாளராகியிருக்கிறார்கள்.

 

“வரதட்சணை விவகாரத்தால் கணவரைவிட்டு வெளியே வந்ததேன். என் தாய் உட்பட உடன்பிறந்தவர்களால் புறக்கணிக்கப்பட்டேன். சமூகத்தில் அநாதையானேன். வறுமை, அரை அங்குல இதயத்தையும், அறையடி வயிற்றையும் வளர்க்க வேண்டுமே. அதற்காக அரும்பாடுபட்டேன். நான் பட்ட அசிங்கங்களை நினைத்தால் எனக்குக் கண்ணீர் முட்டுகிறது. யாரிடமும் கையேந்தக் கூடாது. சுயமாக வேலை பார்க்க வேண்டும் என்ற வெறியால்தான், உயிரை வெறுத்து இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளேன். ஹெவி லோடு ட்ரான்ஸ்ஃபார்ம் வேலையில் அந்தரத்திலிருந்து பணியைச் செய்ய வேண்டும். அது சமயம் நாங்களும் எங்களின் பாதுகாப்பிற்காக மின் சப்ளையை நிறுத்திவிட்டு ட்ரான்ஸ்ஃபார்மரில் எர்த் போட்டுவிட்டுத்தான் உயர் மின்கம்பங்களில் வேலைகளைச் செய்ய ஏறுவோம். மற்றவர்களுக்கு மரணம் எப்பொழுது என்று தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் கண்ணெதிரில் மரணம் உள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்பது நாங்கள் உணர்ந்ததுதான்” என்று கண்கள் கசிய வேதனையை வெளிப்படுத்தும் கலா பார்வதி, அரசாங்கம் எங்களைப் போன்ற மின் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கினால் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று வறண்ட குரலில் சொன்னார்.

 

"We have come to this dangerous job because we hate to live" - two women in a painful voice demanding the government

 

“நிரந்தரமற்ற வேலை. எத்தனை நாள் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பது இந்தப் பணியில் நிச்சயமில்லை. கிடைக்கும் தினக்கூலியான 300 ரூபாயில் பெட்ரோல் செலவு 50 போக மீதமிருப்பதில்தான் எங்களின் வாழ்க்கையை ஓட்டுகிறோம். மரணம் பற்றி எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மரணத்தோடு போராடுகிறோம். எங்கள் வீட்டு வறுமைதான் என் கண்முன்னால் நிக்குது. வறுமைக்கு முன்னால மரணமோ உசுரோ எனக்குத் தூசுதான். உசுரை வெறுத்துத்தான் இந்த ஆபத்தான வேலைக்கு வந்திருக்கிறோம். இதற்கெல்லாம் துணிச்சல் வேணும். உயிர் பயத்த நெனச்சா இந்த வேலைக்கு வரமுடியாது. எங்களைப் போல உயிரை வெறுத்த பெண்களால்தான் இந்த வேலையைப் பார்க்க முடியும். அதே சமயம் இந்த ஆபத்தான பணிக்கு அனுப்ப, வீட்டிலுள்ளவர்களின் சப்போர்ட் வேண்டும்” என்கிற கலையரசியின் குரலில் வேதனை மண்டியிருந்தது. மின்சாரத் துறையின் இளநிலைப் பொறியாளர் நிலையிலிருக்கும் அதிகாரிகள் சிலரிடம் இந்தப் பெண்களின் மின் பணி பற்றி பேசியபோது, “ஆண் பணியாளர்களைவிட இந்தப் பெண் பணியாளர்கள் கொடுக்கப்பட்ட வேலையை விரைவாகச் செய்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆண்களுக்கு நிகரான இந்தப் பெண்களின் பணியும், துணிச்சலும், அசாத்தியமானதுதான்” என்கிறார்கள். “கண்ணெதிரே நிற்கும் எமன், எந்த நொடியிலும் பாசக்கயிற்றை வீசலாம் என்பதைத் தெரிந்தே இந்தப் பெண்கள் எமனோடு மல்லுக்கட்டுவது அசாதாரணமானதுதான்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.