Skip to main content

“உயிரோடு கரை திரும்புவோம் என்ற எண்ணமே இல்லை!” -குமரி மீனவர்கள் துயரம்!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

"We have no intention of returning to shore alive!" -Kumari fishermen tragedy!

 

குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள், திடீரென மாயமானதால், உறவினர்கள் கவலை அடைந்தனர். இந்தச் சூழலில், 8 நாட்களுக்கு பிறகு அவர்கள் கரை திரும்பியது, உறவினர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.

 

குமரி மாவட்டம் வள்ளவிளையைச் சேர்ந்த ஜோசப் ப்ராங்க்ளின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 11 மீனவர்கள் சென்றனர். கடந்த 23-ஆம் தேதி இரவு, கோவா கடற்கரையில் இருந்து 600 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்கும்போது, பெரிய கப்பல் ஒன்று  இவர்கள் படகில் மோதியதே தெரியாமல் மோதிவிட்டுச் சென்றது. இதில், படகு நிலைகுலைந்து, மீனவர்கள் தூக்கி வீசப்பட்டனர். மோதிய வேகத்தில் படகின் மேற்கூரையும், கூண்டு எனச் சொல்லப்படும் படகின் பாடியும் சேதம் அடைந்துவிட்டது.

 

"We have no intention of returning to shore alive!" -Kumari fishermen tragedy!

 

இன்ஜினும் பழுதாகிவிட, காற்றின் வேகம் காரணமாக படகை கரையை நோக்கிச் செலுத்த முடியாமல் தவித்த மீனவர்கள், ஒருவழியாக படகைச் சரிசெய்து, இன்று (1-ஆம் தேதி) கரை திரும்பினர். முன்னதாக மீனவர்களை தொடர்புகொள்ள முடியாமலும், அவர்களின் நிலை தெரியாமலும் உறவினர்கள் கலக்கத்திற்கு ஆளானார்கள். சக மீனவர்கள் தேடும்போது, படகின் உடைந்த பாகங்கள் மட்டும் தென்பட்டதால், அத்தனை பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்தது.

 

இதனிடையே, 28-ஆம் தேதி சாட்டிலைட் போன் மூலம், கரையில் இருக்கும் உறவினர்களைத் தொடர்புகொண்ட மீனவர்கள், தாங்கள் உயிரோடு இருக்கும் விபரத்தை தெரிவித்தனர். அதன்பிறகே,  உறவினர்கள் நிம்மதி அடைந்தனர்.

 

"We have no intention of returning to shore alive!" -Kumari fishermen tragedy!

 

படகு உரிமையாளர் ஜோசப் ப்ராங்ளின்  “கப்பல் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட நாங்கள், முடிந்த அளவுக்கு படகைச் சீர் செய்து, கரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். கரையை நெருங்கி வரும்போது சாட்டிலைட் போன் வேலை செய்ததால், 28-ஆம் தேதி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தோம். கரைக்கு 72 நாட்டிக்கல் தொலைவில் வரும்போது, இந்திய கடலோர காவல்படை எங்களுக்கு உதவியது. கரை திரும்புவோம், உயிர் பிழைப்போம் என்ற எண்ணமே எங்களுக்கு இல்லை. மாதாவின் அருளால் வந்து சேர்த்திருக்கிறோம்.” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.
 

நம்பிக்கைதானே வாழ்க்கை!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.