Skip to main content

“மனு அளித்ததின் பேரில் ஆய்வுக்கு வந்துள்ளோம்”-மோசடி நபரைக் கைது செய்த சைபர் கிரைம்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

"We have come to investigate on the basis of the petition" - Cyber crime arrested fraudulent person

 

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா என்பவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவரது கணவர் அபுல்ஹசன், என்பவருடன் வசித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 14.06.2021-ஆம் தேதி தனது மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இறந்து விட்டதாகவும், எனவே தனது மகளின் வாழ்க்கைக்கு உதவி செய்யவேண்டி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 16.08.2021ஆம் தேதி பெனாசீர் தந்தை பாஷா மனு கொடுத்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 12.10.2021-ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் பாஷாவின் வீட்டிற்கு வந்த ஒருவர், தன்னுடைய பெயர் தேவபிரசாத் என்றும், தான் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி தொகை ரூ.5,50,000/- மற்றும் கல்வித்துறையில் வேலை பெறுவதற்கு ஆய்வு மேற்கொள்ளவேண்டி வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு உதவி தொகை பெறுவதற்கு ரூ.30,000/- வரி கட்டவேண்டும் என்றும், வங்கி கணக்கு எண்.40006867151 என்ற ஸ்டேட் வங்கி கணக்கில் பணம் செலுத்த கூறியுள்ளார்.

 

பாஷாவின் மருமகன் தூக்கு போட்டு இறந்த சம்பவ இடத்தை செல்போனில் படம் பிடித்துள்ளதை அலுவலகத்தில் காட்ட வேண்டும் என்று கூறி, மகளின் செல்போனையும் வாங்கி சென்றுள்ளார். பின்னர் வரி பணம் ரூ.30,000/-த்தை மேற்கண்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு செல்போனில் அடிக்கடி பேசி கேட்டதால் சந்தேகம் அடைந்த பாஷா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அங்கு இதுபோல் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்த நிலையில் தன்னை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இப்புகார் மனுவை பெற்ற சைபர் கிரைம் காவலர்கள் சேலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (35) என்பவரை நேற்று 20.10.2021-ஆம் தேதி கைது செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.