Skip to main content

"காதலியின் கணவரை எரித்து சாம்பலை ஆற்றுநீரில் கரைத்துவிட்டோம்..” -ஓராண்டுக்குப் பின் பிடிபட்ட குற்றவாளி பகீர் வாக்குமூலம்!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

"We burned the girlfriend's husband and dissolved the ashes in river water."


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது ஆத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை (22). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மணிமேகலை, பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது தனது மனைவியைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் பாலமுருகன். அதன்பின் ஓராண்டாக பாலமுருகனை காணவில்லை.

 

இது தொடர்பாக அவரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பெயரில், போலீசார் கடந்த ஓராண்டாக பாலமுருகன் பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் பாலமுருகனின் சொந்த ஊரரான ஆத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (26) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.


மணிகண்டனுக்கும், மணிமேகலைக்கும் இருந்த தகாத உறவை உறுதிப்படுத்திய போலீசார், மாயமான பாலமுருகன் விவகாரத்தில் இவர்களுக்கு உண்மை தெரியும் என்று கருதி அதன் அடிப்படையில் மணிமேகலையும் அவரது தகாத உறவினர் மணிகண்டனையும் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பாலமுருகனை அடித்துக் கொலை செய்துவிட்டதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதற்கு உடந்தையாக மணிகண்டனின் அண்ணன் தனசேகர் என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மணிமேகலை, மணிகண்டன், தனசேகர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில், ”பாலமுருகன் மனைவிக்கும் எனக்கும் முறை தவறிய உறவு இருந்து வந்தது. இது ஓரளவு பாலமுருகனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. இந்தநிலையில்  2019ஆம் ஆண்டு மணிமேகலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். மணிமேகலையைப் பார்க்கச் சென்ற பாலமுருகன் மணிமேகலைக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்துவிட்டு அந்த குழந்தை எனது சாயலில் இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் வைத்தே மனைவி மணிமேகலையிடம் சண்டை போட்டு தகராறு செய்துள்ளார்.

 

Ad

 

அங்கிருந்து பாலமுருகன் சென்றுவிட்ட பிறகு இதுபற்றி மணிமேகலை எனக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தார். இனிமேல் பாலமுருகன் உயிரோடு இருந்தால் எங்கள் இருவருக்குமான தகாத உறவிற்கு இடையூறாக இருப்பார். அதனால் அவரது கதையை முடித்துவிட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். அதன்படி அன்றைய தினம் இரவு பாலமுருகன் வீட்டுக்குத் திரும்பி வந்ததை கண்காணித்துக் கொண்டு இருந்தேன். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார். இதையடுத்து நானும், அவரது வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டேன். எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டோம். அதில் பாலமுருகன் தலையை நான் சுவரில் பிடித்து மோதினேன். பின்னர் அங்கிருந்த பித்தளை தவளையினால் அடித்தும் சுத்தியலால் தாக்கியும் அவரை கொலை செய்தேன்.

 

அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு எனது அண்ணன் தனசேகரனிடம் விவரம் தெரிவித்து இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க திட்டமிட்டோம். ஒரு சாக்கு பைக்குள் பாலமுருகன் உடலை வைத்து மூட்டையாகக் கட்டி மோட்டார் சைக்கிளில் நல்லாத்தூர் அருகே உள்ள வாய்க்காலுக்கு கொண்டு சென்றோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்குச் சென்றதும், பாலமுருகன் உடலை தீ வைத்து எரித்து சாம்பல் ஆக்கினோம். அந்தச் சாம்பலை அருகே உள்ள ஆற்று நீரில் கரைத்து விட்டோம்.

 

மேலும் உடல் எரிந்த பிறகும் அங்கு கிடந்த அவரது எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகளை பெரிய கற்களைக் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி தூள் ஆக்கினோம். அதையும் அள்ளிச் சென்று ஆற்றில் வீசி விட்டோம். பாலமுருகன் வீட்டில் நடந்த சண்டையால் அங்கு வழிந்த ரத்தம் போன்ற தடயங்களையும் சுத்தமாக அழித்துவிட்டோம். இதையடுத்து எதுவும் தெரியாதது போன்று இதுநாள்வரை ஊரில் சுற்றி வந்து கொண்டிருந்தேன். அதேநேரம் எனக்கும் பாலமுருகன் மனைவி மணிமேகலைக்கும் உள்ள தகாத உறவிற்கு எந்த இடையூறுகளும் இல்லாமல் இருந்துவந்தோம். இந்தச் சூழ்நிலையில்தான் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார் மணிகண்டன்.

 

Nakkheeran

 

கொத்தனார் பாலமுருகன் மாயமாகி ஓராண்டுக்கு மேலான நிலையில் தற்போது அவர் மனைவி, அவரது தகாத உறவினர் மணிகண்டன், அவரது அண்ணன் தனசேகரன் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்து அவரது உடலை அடையாளம் தெரியாத அளவில் செய்துள்ள கொடூர செயலைக் கண்டு அப்பகுதியில் உள்ள சுத்துப்பட்டு கிராமமக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்த இளைஞர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

அரிவாளுடன் இளைஞர் ஒருவர் கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டு வெளியே வராமல் போக்கு காட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகவும் பிரபல கோவிலாக இருப்பதால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென இளைஞர் ஒருவர் கோவிலின் கருவறைக்குள் அரிவாளுடன் சென்றுள்ளார். பொதுமக்கள் வெளியே வர சொல்லியும் அந்த இளைஞர் கருவறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் பக்தர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவிலுக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை வெளியே கொண்டு வர முயற்சித்தும் அந்த இளைஞர் வர மறுத்தார். மேலும் கையில் இருந்த அரிவாளை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினரின் உதவி நாடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அவர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர்.

The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி அந்த இளைஞர் வெளியே கொண்டுவரப்பட்டார். நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், காதல் விவகாரத்தால் ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் சென்றதும் தெரியவந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கைகளை துணியால் கட்டி வெளியே கொண்டு வரப்பட்ட அந்த இளைஞர் ஆட்டோவில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; கணவனை கொன்று நாடகமாடிய மனைவி

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
The wife who lost his lives her husband became a drama for extramarital affair

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் அங்குள்ள பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜோதி (29, பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இதற்கிடையே, கடந்த 4ஆம் தேதி பென்னாலூர்பேட்டை அருகே உள்ள வல்லூர்புரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்து, பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது, அங்கு சடலமாக கிடந்தது சீனிவாசன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, சீனிவாசனின் மனைவி ஜோதியிடம் விசாரித்த போது, தனது கணவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து, போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனை செய்ததன் பேரில் வெளிவந்த மருத்துவ அறிக்கையில், சீனிவாசனின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து, ஜோதியிடம் விசாரித்த போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த, காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார், ஜோதியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், ஜோதிக்கும், பென்னாலூர்பேட்டை பகுதியில் வசிக்கும் குமாருக்கும் (24) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சீனிவாசனுக்கு தெரிந்ததும், ஜோதியை பலமுறை கண்டித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் விரக்தியடைந்த ஜோதி தனது ஆண் நண்பரான குமாருடன் சேர்ந்து சீனிவாசனை கொலை செய்ய திட்டுமிட்டுள்ளனர். அதில் சம்பவத்தன்று மாலை சீனிவாசனை குமார் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்துள்ளார். 

சீனிவாசன் மது போதையில் இருந்தபோது, அங்கு வந்த ஜோதி,குமாருடன் சேர்ந்து துப்பட்டாவால் கணவர் சீனிவாசனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், மது போதையில் கணவர் இறந்துவிட்டதாக ஜோதி நாடகம் ஆடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜோதி மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.