Skip to main content

’நாம் தமிழர் ஆட்சியில்.......’ - கல்விக் கருத்தரங்கில் சீமானின் பேச்சு

Published on 09/09/2018 | Edited on 09/09/2018
s1

 

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையம் சார்பாக ’தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை - தாய்மொழிக் கல்வி உலக அளவில் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் 'கல்விக் கருத்தரங்கம்' சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று  09..09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில்  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. 


இக்கருத்தரங்கில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை இயக்கத்தின்  பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்துரையாற்றினார். 

 

சீமான் இக்கருத்தரங்கில் பேசியபோது,   ‘’தாய்மொழி கல்வி என்பது தாய்பால் போன்றது; அதை தராவிட்டால் கூட தேசத் துரோகம் தான். தமிழ் தாய்மொழி பாடம் என்ற நிலை மாறி விருப்பப் பாடமாக மாறிவிட்டது. தமிழ்ப் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழ் மொழியைக் கற்பார்கள். 

 

நாங்கள் உலகின் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; எங்கள் தாய்மொழியின் மீது உயிரானவர்கள். ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட உலகின் எம்மொழியையும் கற்போம் நாம் வாழ்வதற்கு; தாய்மொழி தமிழைக் கற்போம் நம் இனம் வாழ்வதற்கு! நாங்கள் ஆங்கிலம் பயில்வதை எதிர்க்கவில்லை; தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக்கப்பட்டதையே எதிர்க்கிறோம்.

 

s2

 

ஒருவனுக்கு கனவு எந்த மொழியில் வருகின்றதோ, அந்த மொழியில் தான் அவருக்கு கல்வி மொழியாக இருக்கவேண்டும்.  ஏனென்றால் நமது சிந்தனை மொழியாக இருக்கும் தாய்மொழியில் கல்வி கற்பதே நமது அறிவை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவானதாகும். தாய்மொழியில் கல்வி கற்றவன் படைக்கிறான்; தாய்மொழியில் கல்லாதவன் பயன்படுத்துகிறான். 

 

கல்வி என்பது விற்பனைப் பண்டமன்று; ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை  ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடின்றி தரமான சமமான இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்திடல் வேண்டும். முதலமைச்சர் தொடங்கி கடைசிமட்ட அரசு ஊழியர்கள் அனைவரின் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில் படிப்பதைக் கட்டாயமாக்கவேண்டும் அப்போதுதான் அரசுப் பள்ளிகளின் நிறை குறைகள் ஆய்ந்தறியப்பட்டு கல்வித்தரம் தானாகவே உயரும்.

 

ஒரு தேசத்தின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே கல்வி குழந்தைகளுக்குச் சுமையாக இல்லாமல் சுவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 

 

நாம் தமிழர் ஆட்சியில் தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும். தமிழ் பயிற்றுமொழியாகவும் ஆங்கிலம் கட்டாயப் பாட மொழியாகவும் இந்தி உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் விருப்பப் பாட மொழியாக அறிவிக்கப்படும். தரமான சமமான இலவசக் கல்வி உறுதிப்படுத்தப்படும். தொடக்கப் பள்ளிகள் முதலே சமூகநீதி, நல்லொழுக்கம், வாழ்வியல், தொன்மம், சாலை விதிகள்  முறையாக கற்றுத்தரப்படும். தமிழில் படித்தால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற நிலையை நாம் தமிழர் அரசு கட்டாயமாக்கும். துறை சார் வல்லுநர்களை உருவாக்கும் தனித்திறன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்’’என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.