Skip to main content

“எங்கெல்லாம் புகார் வருகிறதோ அந்த மாவட்ட கல்வி அதிகாரியை கண்டிக்க உள்ளோம்”- அமைச்சர் பேட்டி!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021
"We are going to reprimand the district education officer wherever there is a complaint" - Minister interview

 

திருச்சியில் கிராமாலயா தொண்டு நிறுவனம் சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 5 பல்நோக்கு கண்காணிப்பு மானிகள், 30 குளிர்பதன பெட்டிகள், 30 வெந்நீர் விநியோக எந்திரங்கள், ஆயிரம் நாடித்துடிப்பும் ஆணிகள் 1000 கருவிகள், 1000 டிஜிட்டல் வெப்பமானிகள் மற்றும் 5000 கிருமி நாசினி மற்றும் துணி ஆடைகள் ஒரு குளிர்சாதனப் பெட்டி மற்றும் கையுறை  வழங்கினர். இதனை வழங்கும் விழா திருச்சி சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில்  நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து சிறப்பு குழுவிடம் கலந்து ஆலோசித்து உள்ளோம். அது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.  பன்னிரண்டாம் வகுப்பு அமைப்பது தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, இரண்டு வாரம் அதற்காக கூறப்பட்டது. சி.பி.எஸ்.சி மதிப்பெண் எப்படி வருகிறதோ, அதேபோன்று கணக்கில் மதிப்பெண் வழங்கப்படும். அவற்றை கணக்கில் கொண்டு நாம் விட்டு விட்டதை  எடுத்துக் கொண்டு இருக்கிறார்களா அல்லது அவர்கள் எதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும். 

 

"We are going to reprimand the district education officer wherever there is a complaint" - Minister interview

 

பள்ளி கட்டணம்  தொடர்பாக பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிகப்படியாக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.  அதிகப்படியான பள்ளியில்  அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. எங்கெல்லாம் இதுபோன்ற புகார் வருகிறதோ அந்த மாவட்ட கல்வி அதிகாரி அழைத்து கண்டிக்க உள்ளோம். கடந்த முறை செப்டம்பர் மாதம் நீதிமன்றமும் அவர்களை கண்டித்துள்ளது. நீதிமன்றம் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அல்லது அபராதம் விதித்து இருந்தாலும் அதனடிப்படையில் நாம் சென்றிருக்கலாம். தற்பொழுது மாணவர்களுக்காக பள்ளி நிர்வாகத்தை விட்டுவிட முடியாது, நிர்வாகத்திற்காக பள்ளி மாணவர்களை விட்டுவிட முடியாது.

 

கல்விக் கட்டணம் கட்டாததால் ஆன்லைன் மூலம் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து கொடுப்பது குறித்து புகார் வரும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். படிப்படியாக தற்போது கரோனோ நோய்த்தொற்று குறைந்து வருகிறது எனவே முதல்வருடன் கலந்தாலோசித்த பின்னர் பள்ளி திறப்பது குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் மாணவ, மாணவியருக்கு டேப்  வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் சேர்த்து நடப்பு கல்வியாண்டில் அனைவருக்கும் டேப் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.