Skip to main content

பாசிச ஆட்சியாளர்களை எதிர்க்க கல்வியே ஆயுதம்! காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு அறிக்கை!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

 

 


மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வருவதை குறித்து இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை சமூகம் பெரும் கவலை அடைந்து இருக்கலாம். கடந்த 5 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் இக்லாக் படுகொலை, ஜுனைத் படுகொலை போன்ற கொடூர சம்பவங்கள் இந்த கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இதே 5 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் நடந்த மற்றொறு சம்பவத்தையும் நினைவுகூறுவோம்.

 

education

 

முஹமது முஹ்ஸீன் என்ற முஸ்லீம் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிடுகின்றார், பிரதமர் உடனே அவரை பணியிலிருந்து சஸ்பென்ட் செய்கிறார், ஒரு வாரத்தில் அந்த முஸ்லீம் அதிகாரி சஸ்பென்ட் உத்தரவை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மீண்டும் பணியாற்றிவருகின்றார்.



கல்வி அறிவை வளர்த்து கொண்டு அரசு அதிகாரியாக இருக்கும் ஒரு இஸ்லாமிய சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்தவரை பிரதமராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பத்துபைசா பிரயோஜனம் இல்லாத ரவுடிகளால் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை மக்களை துன்புறுத்தப்படுகிறதென்றால் இந்த சமூகம் கல்வியிலும் அரசு பணியிலும் பின் தங்கியிருப்பது மிக முக்கிய காரணம், கல்வி கற்று அரசு அதிகாரியாக இருந்தால் இந்த ரவுடிகள் தாக்க முற்படுவார்களா ?



சிறுபான்மை சமூகமாக இருப்பதினால்தான் இஸ்லாமிய சமூகம் துன்புறுத்தப்படுகின்றது என்ற வாதம் ஏற்புடையதல்ல. இஸ்லாமியர்களைவிட சிறுபான்மையாக இருக்கும் சமூகங்கள் இந்தியாவில் இஸ்லாமியர்களை போல் துன்புறுத்தப்படுவதில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அந்த சமூகங்கள் கல்வியில் முன்னேறி, அரசு பணிகளில் பெரும் பங்காற்றுவதை அறியலாம்.

 


மத்திய கிழக்கில் யூதர்கள் சிறுபான்மையினர்தான், பெரும்பான்மை அரபுகளால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹிட்லரால் துன்புறுத்தப்பட்ட யூத சமூகம் இன்றைக்கு உலகின் சக்திவாய்ந்த சமூகமாக இருக்கிறதென்றால் அறிவியல், தொழில்நுட்பத்தில் அவர்களின் அறிவு வளர்ச்சி தான் காரணம்.

 


ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனால்தான் பாதுகாப்பு கிடைக்குமா ? அப்படி என்றால் எல்லோரும் முஹமது முஹ்ஸீன் போல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடியுமா ? இது நடைமுறை சாத்தியமா ? என நீங்கள் நினைக்கலாம். அரசு துறையில் தன் சதவீதத்திற்கு ஏற்ற பங்களிப்பு இஸ்லாமிய சமூகத்திற்கு போதுமானது, இது இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை மக்களை அநியாயமாக தாக்க நினைக்கும் ரவுடிகளை உளவியல் ரீதியாக தடுக்கும்.

 



உண்மையில் தற்போது முஸ்லீம்கள் மீது நடத்தபடுவது உளவியல் ரீதியிலான தாக்குதல்தான். ஒரு சில இஸ்லாமியர்களை துன்புறுத்தி, கொலை செய்து அதை வீடியோ எடுத்து இந்தியா முழுவதும் பரப்புகின்றார்கள், இதைபார்க்கும் முஸ்லீம்கள் அச்சப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், உண்மையில் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் நம்மை தாக்க போவதில்லை, ஆனால் தாக்கபடுவோம் என்ற பயத்தை உளவியல் ரீதியாக முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்படுத்துகின்றனர், இந்த பயம் தான் இஸ்லாமியர்களை இயல்பாக கல்வி கற்பதையும், தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதையும் தடுக்கும்.



இதை உளவியல் ரீதியாக எளிதாக வெல்லாம், ஆனால் இஸ்லாமிய சமூகம் இப்படிபட்ட சம்மபவங்களை அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாக அணுகி, சூழ்சியில் வீழ்ந்துவிடுகின்றது.

 



இஸ்லாமிய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் செய்தி தான் சென்றடைய வேண்டுமே தவிர, இஸ்லாமியர்களை பயமுறுத்தும் செய்தி அல்ல. இதை இஸ்லாமிய சமூகம் உணர வேண்டும். ஒரு செய்தியை பரப்பும் முன் இது இஸ்லாமிய மாணவர்களை உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிக்கும் என சிந்தித்து செயல்படுங்கள்.

 



காங்கிரஸ் கட்சியினால் பிஜேபியை வீழ்த்துவது கடினமல்ல, இருந்தாலும் இஸ்லாமிய மாணவர்கள் தான் கல்வியில் கவனம் செலுத்தி அரசு பணியில் அமர்வதற்கான போட்டி தேர்வுகளில் வெல்லும் அளவிற்கு தங்களை தயார்படுத்திகொள்ள வேண்டும். தனியார் துறைகளில் உள்ள உயர்பதவிகளில் அமர்ந்து பொது சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை மாற்றி , பிரித்தாளும் சூழ்சியை முறியடிக்கும் அளவிற்கு தங்களின் கல்வி அறிவையும் , திறமையையும் வளத்துகொள்ள வேண்டும்.வியாபார துறையில் விருப்பம் உள்ள மாணவர்களும் அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்கால வியாபார சந்தையை தமதாக்க முயலவேண்டும்.

 



இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை சமூகத்தின் முன் தற்போதுள்ள ஒரே வழி கல்வி அறிவு சார்ந்த வளர்ச்சியை நோக்கி பயணிப்பதுதான். இவ்வார் அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.