Skip to main content

நாங்களும் மனுசங்க தானே...! எங்களுக்கு கரோனா டெஸ்ட் எப்போ எடுப்பீங்க!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

We are Also human beings too! ..When take the Corona Test?

 

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வழுத்துள்ளது.

 

இது குறித்து ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவையின் மாநில துணைச்செயலாளர் சோழன் பேசுகையில், “தமிழகத்தில் எந்த ஒரு பேரிடர் காலம் வந்தாலும் மீட்பு குழுவினருக்கு இணையாக தூய்மைபணியாளர்களும் களத்தில் நின்று வேலை செய்கிறோம். சுனாமி, புயல், பெரும்மழையினால் ஏற்படும் சீற்றம் உள்ளிட்ட காலங்களில், மக்களுக்கு அரணாக இருந்து செயலாற்றி வருகிறோம். சுனாமி காலத்தில் இறந்தவர்களின் சடலத்தை எடுக்க இராணுவமே தயங்கியது. அப்போது, சென்னையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் சடலங்களைக்கூட அப்புறப்படுத்தினர். அதற்காக சட்டமன்றத்திலேயே எங்களை அனைத்து கட்சியினரும் பாராட்டினார்கள். ஆனால், தற்போது உள்ள இந்த கரோனா சூழ்நிலை என்பது அனைத்து பேரிடர்களைக்காட்டிலும் மோசமான ஒன்று.

 

உலகப்பேரிடரான இந்த கரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலளர்கள் உள்ளிட்டோர் முதன்மைப் பணியாளர்கள் ஆவர். எங்களின் உயிரைப் பணையம் வைத்து தொடர்ந்து ஒய்வின்றி உழைத்து வருகிறோம். மாறாக அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள்கூட எங்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை என்பதுதான் இங்கு வேதனையான விஷயம். அப்படி கிடைத்தாலும், 6 மணிநேரம் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்டவைகளை இரண்டு நாட்கள் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது.

 

We are Also human beings too! ..When take the Corona Test?


இது ஒரு புறம் இருக்க, நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரத்தன்மை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் அச்சுறுத்தும் விதமாக முதன்மைப் பணியாளர்களாக இருப்பவர்களுக்கு எளிதில் நோய் தொற்றிவிடுகிறது, பலர் இறந்தும் வருகின்றனர். தமிழகத்தில் முதன்முதலாக சென்னையில்தான் தூய்மைப்பணியாளர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அங்கேதான் இறப்பு சம்பவமும் நடைபெற்றது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுவும், 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அரசு கூறியது.

 

ஆனால், நாகர்கோவில், பல்லடம், ராசிபுரம் உள்ளிட்ட சில இடங்களைத்தவிர, எந்த பகுதியிலும் முறையான பரிசோதனை நடத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள், பிரதமரின் சிறப்பு திட்டமான தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்டவைகளின் கீழ் நிரந்தரம், ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மக்களை நேரடியாக களத்தில் சென்று சந்திக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே, எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் பணியாற்றுகிறோம். தற்போது, தமிழகத்தில் உள்ள காவல் துறையினருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், பலருக்கு கரோனா இருப்பது உறுதியானது. அதில், பல இறப்புகளும் நிகழ்ந்தன. மக்களுடன் குறைந்த அளவு தொடர்பு கொண்டவர்களுக்கே இந்த சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் தூய்மைப் பணியாளர்களின் நிலை என்ன, கரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பது மட்டுமே அரசு செய்கிறது. ஆனால், அந்த பகுதியில் கட்டை கட்டுதல், கிருமிநாசினி தெளித்தல், மக்கள் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்குதல், அதுமட்டுமின்றி தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று குப்பைகளை பெறுதல் ஆகிய பணிகள் இருக்கும் நிலையில், எப்படி கரோனா எங்களுக்கு நோய் தொற்றாமல் இருக்கும்.

 

கரோனாவுக்கு பிறகு ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் பணியாற்றி பழனி என்பவர் தூய்மைப் பணியில் இருக்கும்போதே திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த அதிகாரிகள், உடனே குப்பை வண்டியில் அவரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், அவர் இறந்ததுவிட்டார் என்பதால், அவரை போஸ்மார்டம் செய்யாமல், கரோனா டெஸ்டும் எடுக்காமல் அப்படியே குடும்பத்தினரிடம் கொடுத்து அடக்கம் செய்ய சொல்லிவிட்டனர்.

 

அந்த அளவிற்கு எங்களுக்கு எங்களின் மீது தீண்டாமை எண்ணம் உள்ளது அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கொண்டுள்ளனர். நாங்கள் ஒன்றும் எங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில் மட்டும் டெஸ்ட் எடுக்கச்சொல்லவில்லை. ஒவ்வொரு வார்டாக சென்று மக்களை பார்க்கிறோம். அதோபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் தூய்மைப் பணியாளர்கள் என்பவர்கள் கூட்டம், கூட்டமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நெருக்கமான முறையிலோ அல்லது அடுக்குமாடி கூடியிருப்பிலோதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு கரோனா இருந்தால் எங்கள் மூலமாக பரவும் விகிதம் அதிகம் ஆகும். எனவே, முதலில் எங்களுக்குத்தான் கரோனா பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.

 

We are Also human beings too! ..When take the Corona Test?


அதைவிடுத்து, கரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே டெஸ்ட், மற்றபடி சத்து மாத்திரை, இரத்த பரிசோதனை, தெர்மல் டெஸ்ட், தினமும் கபசுரக்குடிநீர் என வழங்கி கரோனா வராது என அதிகாரிகள் சொல்கிறாகர்கள், எங்கள் பணியாளர்களும் விழிப்புணர்வே இல்லாமல் நமக்கெல்லாம் கரோனா வராது என தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை சென்னை, மதுரை, சேலம், ஈரோடு என 11 தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் இறந்துள்ளனர்.

 

அறிகுறி வந்ததற்கு பிறகு பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில்கூட அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கரோனா கண்டறியப்பட்டு, தற்போது அவரின் குடும்பத்தில் உள்ளோருக்கும் இருப்பதும் கண்டறியப்பட்டது. திருச்சியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.

 

தற்போது இந்த விஷயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப்பணியாளர்கள் எல்லோருக்கும் டெஸ்ட் எடுத்து கரோனா இருப்பது உறுதியாகிவிட்டால், பயத்தில் யாரும் வேலைக்கு வரமாட்டார்கள் எனவேதான் அரசு கரோனா டெஸ்ட் எடுக்க மறுக்கிறது. அதேபோல், களத்தில் பணியாற்றி இறந்துபோகும் தூய்மைப் பணியாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்தது போன்று ரூ.50லட்சம் இழப்பீடும் வழங்கப்படாமல் உள்ளது.

 

We are Also human beings too! ..When take the Corona Test?


எனவே, உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் தூய்மைப்பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும், பணியில் இருக்கும்போது கரோனாவால் இறந்தவரின் வீட்டிற்கு ஒரு அரசு வேலை வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக பணியமர்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தொடர்ந்து எங்கள் சங்கம் உள்ள 15 மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

 

பொதுவாகவே, தூய்மைப்பணியாளர்களாக இருப்பவர்கள் 60 சதவீதத்தினர் தோல்நோய், சுவாச பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு உட்பட்டு 50 வயதிலேயே மரணம் அடைந்து விடுகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில், இந்த கரோனா காலத்தில் அரசும் எங்களை வஞ்சிப்பது பெரும் கொடுமையாக உள்ளது. நாங்களும் மனுசங்கதானே எப்ப எங்களுக்கு கரோனா டெஸ்ட் எடுப்பாங்க சார்…” என்றார் வேதனையுடன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.