Skip to main content

வாட்ஸ் அப் வீடியோ காலால் வந்த விபரீதம்... மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் கொடூரம்!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

சேலம் அருகே பேருந்தில் ஆண் நண்பருடன் ஒன்றாக அமர்ந்து பயணித்த கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமில்லாமல் பெற்றோரிடம் சொல்லாமல் இருக்க வாட்ஸப்பில் வீடியோ காலில் இளம்பெண்ணை வரும்படி வற்புறுத்தி ஆடையை களையச்செய்து வீடியோவாக பதிவு செய்து அதை வாட்ஸ்அப்பில் நண்பருடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

watsapp video call - sexual abuse to nurse


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் செவிலியர் பயிற்சி படிப்பு முடித்து நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டு சுற்றுவட்டார பகுதியில் அந்த பெண் குறித்த வாட்ஸ்அப் வீடியோ காட்சி ஒன்று வைரலானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

 

watsapp video call - sexual abuse to nurse


இதனை தெரிந்து கொண்ட அந்த மாணவியின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அருகே உள்ள ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தனது பெண்ணின் வீடியோவை பரப்பிய வரதராஜன், விஜயகுமார், சங்கர் ஆகியோர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். காவல் நிலையத்திற்கு சென்றதால் தன் பெயர் கெட்டுவிடும் என்று அஞ்சிய அந்தப் பெண் வீட்டில் இருந்த மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து விட்டு தற்கொலை முயன்றுள்ளார்.

 

watsapp video call - sexual abuse to nurse


தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பெற்றோர்கள். இதற்கிடையில் அந்த மாணவியின் ஆபாச வீடியோ குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.

சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தற்போது நர்சாக பணியாற்றி வரும் நிலையில் அவர் மாணவியாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆண் நண்பருடன் பேருந்தில் ஒன்றாக ஒரே இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். இதனை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்ற நபர் அதனை செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளான். அதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவியிடம் அந்த புகைப்படத்தை காட்டி உன் பெற்றோரிடம் இந்த புகைப்படத்தை காட்டி விடுவேன் நீ காதலித்துக் கொண்டு ஆண்களுடன் சுற்றுகிறாய் என்று உன் வீட்டில் சொல்லி விடுவதாக மிரட்டியுள்ளான். வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் தன்னுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச வேண்டுமெனவும் பிளாக்மெயில் செய்துள்ளான். வாட்ஸப்பில் பேசினால் யாருக்கும் தெரியாது இருவருக்கு மட்டுமே இரகசியமாக இருக்கும் எனவும் கூறியுள்ளான்.

 

watsapp video call - sexual abuse to nurse


அந்த கொடூரனின் உண்மைமுகம் தெரியாத அந்த பெண் மிரட்டலுக்கு பயந்து அவ்வப்போது அவனுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று மிரட்டலின் உச்சகட்டமாக வீடியோ காலில் அந்தப் பெண்ணின் ஆடைகளை களைய சொல்லி உள்ளான் அந்த கொடூரன். வேறு வழி தெரியாத அந்த இளம் பெண் மிரட்டலுக்கு பயந்து கல்லூரியில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு சென்று ஆடைகளை களைந்துள்ளார். அதை வாட்ஸ்அப் வீடியோ காலில் வரதராஜன் பதிவு செய்துள்ளான். அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் கூறி தன்னுடைய ஆசைக்கு மேலும் இணங்க வேண்டும் என தொடர்ந்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளான்.

 

watsapp video call - sexual abuse to nurse

 

இதனை தாங்க முடியாத அந்த இளம்பெண் வரதராஜனுடன் பேசுவதையே முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்.  இந்நிலையில் வரதராஜன் அந்த கல்லூரியில் அந்த பெண் படிக்கும்பொழுது சென்ற கல்லூரி பேருந்தில் ஓட்டுநராக இருந்த பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் என்பவனிடம் உங்கள் கல்லூரி மாணவியின் வீடியோ என்று அந்த ஆபாச வீடியோவை பகிர்ந்துள்ளான்.  அவனும் இந்த வீடியோவை அவனது நண்பரான ஷங்கர் என்பவனிடம் காண்பிக்க அவனும் தன் பங்கிற்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளான். 

 

watsapp video call - sexual abuse to nurse


இப்படி பகிரப்பட்ட இந்த வீடியோவானது சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவரின் கண்ணில் பட வீடியோ விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீடியோபதிவு செய்து மிரட்டிய வரதராஜன் தலைமறைவாக உள்ள நிலையில், கல்லூரி பேருந்து ஓட்டுநர் விஜயகுமார், சங்கர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இதுபோன்று புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ பெண்கள் அஞ்சத் தேவையில்லை என்று எச்சரிக்கும் காவல்துறை, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் காவல்துறையின் உயர் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் வாட்ஸப்பில் புகைப்படங்களை பகிர்வது வீடியோ காலில் பேசுவதையோ  தவிர்ப்பது நல்லது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.