Skip to main content

முன்பின் தெரியாத வாட்ஸ் அப் குழு... ஆசையால் நிகழ்ந்த மோசடி!! 

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

watsapp incident  in chennai

 

வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில் தற்போது விளம்பரம் மற்றும் வியாபாரம் மேற்கொள்வதற்கான தளமாகவும் இயங்கி வருகிறது. அதேபோல் வாட்ஸ் அப் மூலம் மோசடிகள் அரங்கேறி வரும் சம்பவங்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இந்திரபிரகாஷ் என்பவரின் செல்ஃபோன் எண் திடீரென முன்பின் தெரியாத ஒரு வாட்ஸ்அப் குழுவுடன் இணைக்கப்பட்டது. இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத இந்திரபிரகாஷ் அந்தக் குழுவில் இருந்து வெளியே வராமல் நீடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்தக் குழுவில் நிறைய ஆடைகள் குறைந்த விலையில் கிடைப்பதாக விளம்பரங்கள் புகைப்படங்களுடன் வரத் தொடங்கின. இதனால், நிறைய ஆடைகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என நம்பி அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின் கொடுத்த விளம்பரங்கள் உண்மையா அல்லது இந்த விளம்பரங்களை வெளியிட்டவர் நம்பகத்தன்மை உடையவரா என்பதை பற்றியெல்லாம் யோசிக்காத இந்திரபிரகாஷ், அந்தக் குழுவின் அட்மின் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு பணத்தைச் செலுத்தியுள்ளார்.

வீடு தேடி ஆடைகள் வரும் என நினைத்துக் கொண்டிருந்த, இந்திரபிரகாஷ்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. சில நாட்கள் ஆகியும் எந்த விதமான ஆடைகளும் வீட்டிற்கு வராத நிலையில், சந்தேகமடைந்த இந்திர பிரகாஷ் வாட்ஸ்அப் குழுவில் அட்மினை தொடர்பு கொண்டபோது அந்த எண் அணைக்கப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இந்திரப் பிரகாஷ் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த வாட்ஸ் அப் குழுவை நிர்வகிப்பவர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முகநூல் பக்கத்தில் மொபைல் எண்ணை வெளிடுபவர்களைக் குறிவைத்து அவர்களது எண்ணை சேகரித்து வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளார் ராஜேந்திரன். அந்தக் குழுக்களில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டு, ஏமாற்றி பணமோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுபோல் நூற்றுக்கு மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதான ராஜேந்திரனிடம் இருந்து 6 சிம்கார்டுகள் மற்றும் செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறை, முன்பின் தெரியாத குழுக்களில் மொபைல் எண் இணைக்கப்பட்டால் அலட்சியமாக எடுத்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.