Skip to main content

உண்போருக்கு குளிர்ச்சியையும், உற்பத்தி செய்வோருக்கோ எரிச்சலையும் தந்திருக்கும் தர்பூசணி!

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
tharpoosani

 

கோடை வெய்யிலின் களைப்பை போக்கி குளிர்ச்சி தரும் தர்பூசணி விளைச்சலும், விலையும் குறைந்ததால் கடலூர் மாவட்ட விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் திருமுட்டம் அருகே உள்ள சாவடிக்குப்பம், கொழை, அகரசோழத்தரம், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குமட்டிக்காய் எனப்படும் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். கோடைக்காலத்தில் குளிர்ச்சி தர கூடியது என்பதால் தர்பூசணியை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

 

 ஜனவரி  மாதம் நடவு செய்யப்படும் தர்பூசணி  மார்ச் மாதம் விளைச்சல் தர தொடங்கி ஜூலை மாதம் வரை ஐந்து மாதங்கள் காய் தர கூடியதாகும். தர்பூசணியை நடவு செய்வதற்கு, பார்கள் அமைத்து பார்களின் இரு கரைகளிலும் இரண்டு அடி இடைவெளியில் செடிகள்  நடவு  செய்யப்படுகிறது. நடவு செய்வது, பார்கள் அமைப்பது, உரம் இடுவது, ஆட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு 25,000 வரை செலவிடப்படுகிறது. 

 

கடந்த காலங்களில்  ஒரு ஏக்கரில் சுமார் 10 டன் வரை தர்பூசணி காய்த்துள்ளது. அதேபோல் டன் ஒன்று 10,000 வரை விலை போயுள்ளது. இதன் மூலம் செலவுகள் போக ஏக்கருக்கு 70000 ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணியை பெங்களூர், சென்னை, திருச்சி என பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் வயலுக்கே நேரிடையாக வந்து வாங்கி செல்வாரகள். ஆனால் இந்த ஆண்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்பூசணி விளைவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் வாங்கிக்கொள்கின்றனர். இதனால் வெளியூர் வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் விலை சரிவடைந்து டன் 5000 ரூபாய் தான் போகிறது, அதேசமயம் நோய் தாக்குதலால், காய் பிடிப்பும், குறைந்துள்ளது.

 

விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் போட்ட முதலுக்கே மோசம் என வேதனையின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

 

 பனிப்பொழிவால பூசணி பூக்கள் அழுகிடுது. மாத்தி மாத்தி மருந்து அடிச்சி பார்த்தாலும் காய் பிடிக்கல. பாதிக்கு பாதி கூட காய் பிடிக்கல. தேனி, திண்டுக்கல்னு அங்கங்க தர்ப்பூசணிசாகுபடி செய்றதால வெளியூர் வியாபாரிகள் வர்றதும் குறைஞ்சிடுச்சி. கடன் உடன வாங்கி சாகுபடி செய்தும் எந்த பிரயோசனும் இல்லை. போட்ட முதலும், உழைச்ச உழைப்பும் வீணாய் போய்ட்டுது” என விரக்தியில் புலம்புகிறார் அகர சோழத்தரம் விவசாயி செந்தில்.


 

உண்போருக்கு குளிர்ச்சியை கொடுப்பது தர்ப்பூசணி, ஆனால் அதை உற்பத்தி செய்வோருக்கோ எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 
-    சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

அ.ம.மு.க.வுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Allotment of election symbol to AMmK

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு கேட்ட 2 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். எந்தெந்த தொகுதியில் போட்டி என்பதை பா.ஜ.க. அறிவிக்கும். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் குக்கர் சின்னத்தில் தான் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத்தான் எங்கள் கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அதன் அடிப்படையில் ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளாவது போட்டியிடுங்கள் என பா.ஜ.க. கூறியது” எனத் தெரிவித்திருந்தார்.

Allotment of election symbol to AMmK

இதற்கிடையே வரும் மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க.விற்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் டி.டி.வி. தினகரனின் கோரிக்கையை ஏற்று அ.ம.மு.க.விற்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அ.ம.மு.க., பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.