Skip to main content

சீசன் முடிந்தும் ஆர்ப்பரிக்கும் அருவிகளின் நகரம்!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

waterfalls at the end of the season!

 

வருடந்தோறும் தென்மேற்குப் பருவக் காற்றின் விளைவாய் கேரளப் பகுதிகளில் அடைமழை இருக்கும். அதன் தாக்கம் தென்மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருப்பதோடு, குறிப்பாக, தென்காசியின் பக்கமுள்ள அருவிகளின் நகரமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இதமான காற்று வீசுவதோடு மலையில் சாரல் மழையும் பொழியும். அதன் விளைவாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அருவியாய் கொட்டும். இந்த மூன்று மாதங்களிலும் அருவியில் குளியல் போடவும், சீசனை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவது வழக்கம்.

 

waterfalls at the end of the season!

 

தற்போது ஆகஸ்ட் மாதத்தில் சீசன் முடிந்து இறுதி கட்டத்தையடைந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் நேற்று முதல் குற்றால மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர் சாரல் மழை காரணமாகக் குற்றாலத்தில் உள்ள புலியருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி ஆகியவைகளில் தண்ணீர் கொட்டுகிறது. அதே சமயம் ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாகவே விழுகிறது. அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் நன்றாக விழுந்தபோதும், லாக்டவுன் காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாதவாறு போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.