Skip to main content

தண்ணீர் இன்றி தடுமாறும் சென்னையில் தண்ணீர் வீணாவதை தட்டிக்கேட்டவருக்கு சரமாரி அடி! ஓய்வு பெற்ற டிஎஸ்பி மீது புகார்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் 14 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பில் அகமது ஜியாவுதீன் என்பவர் தனது மனைவியுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். குடியிருப்பின் தரைத்தளத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி ஆவார்.

 

water wasted in apartment: Complaint on retired DSP

 

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பணம் கொடுத்து லாரிகளில் குடிநீர் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில்  குடியிருப்புக்கு வந்த தண்ணீரை தரைதளத்தில் வசிக்கும் முன்னாள் டிஎஸ்பி ராமசாமி வீட்டு உபயோகத்திற்கு மட்டும் இன்றி தான் வளர்க்கும் செடி கொடிகளுக்கு இன்னபிற தேவையற்ற தேவைகளுக்கும் செலவு செய்து வீணாக்கியதாக கூறப்படுகிறது. 

 

water wasted in apartment: Complaint on retired DSP

 

இதை முதல் தளத்தில் வசிக்கும் ஜியாவுதீன் தட்டி கேட்டதோடு செல்போனிலும் படம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் டிஎஸ்பி ராமசாமி ஜியாவுதீனிடமிருந்து செல்போனை பறித்ததோடு கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கேட்ட ஜியாவுதீனின் மனைவி நஸ்ரினையும்  தகாத வார்த்தைகளால்  வசைபாடி உள்ளார். இதன்பிறகும் ஆத்திரம் அடங்காத ராமசாமி ஜியாவுதீனை தாக்கும் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

water wasted in apartment: Complaint on retired DSP

 

இதுகுறித்து ஜியாவுதீன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், முன்தினம் இரவு ஒரு லாரி தண்ணீர், 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை 12 நிமிடத்தில் காலி செய்துவிட்டார்கள். வேண்டுமென்றே நீரை அலட்சியமாக ஓபன் பண்ணி விட்டார்கள். ஏன் இந்த மாதிரி பண்ணினார்கள் எல்லாரும் சேர்ந்து கேட்டதற்கு தப்பா நாங்கள் பேசினோம் என்று சொல்லி அலிகேசன் உருவாக்கி என்னை அடி அடி என்று அடித்துள்ளார் என்றார்.

 

water wasted in apartment: Complaint on retired DSP

 

இதுகுறித்து ஜியாவுதீன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதன் பேரில் முன்னாள் டிஎஸ்பி ராமசாமி, அவரது மருமகன் பிரபாகரன் ஆகியோர் மீது தாக்குதல் மற்றும் பெண் வன்கொடுமை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற டிஎஸ்பி  ராமசாமி  மற்றும் அவரது மருமகன் பிரபாகரனைப் பிடித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.