Skip to main content

அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

தமிழ்நாடு தண்ணீருக்காக அலைந்துகொண்டிருக்கிறது. மழையும் பொய்த்துவிட்டது, இது சென்னையின் பிரச்சனை மட்டுமில்லை, தமிழ்நாடு முழுக்க இதே பிரச்சனைதான்.
 

water problem


டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் திறக்கப்படாததும் காரணமானது. சென்னையின் தண்ணீர் தேவையை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து திருட்டுத்தனமாக தண்ணீரை உறுஞ்சுகின்றன அதை 8000, 10,000 என விற்கின்றன. தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் அந்த கிராமங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என எழுதிப்போடாததுதான் மிச்சம் அவ்வளவு வறட்சி இருக்கிறது. அடுத்த ஆண்டு சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் சுத்தமாக இருக்காது என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படியாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள் முதல் பொதுக்கழிப்பறை வரை அனைத்தும் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அமைச்சர் வேலுமணி, தண்ணீர் பஞ்சம் என்பது பொய் பிரச்சாரம், இங்கு தண்ணீர் பஞ்சம் இல்லை. மூடப்பட்ட கடைகளும், ஐ.டி. நிறுவனங்களும் தண்ணீர் இல்லாததால் மூடப்படவில்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை கிரீன் வேஸ் சாலையில் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களின் வீடு இருக்கிறது. 

தினமும் அங்கு இரண்டு லாரிகளில் சென்னை மெட்ரோ தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. இரண்டு தானே என நினைக்கவேண்டாம் ஒரு லாரி என்பது 12000 லிட்டர் தண்ணீரைக் கொண்டது. இரண்டு லாரிகள் என்பது 24000 லிட்டர் தண்ணீர் அங்கு இருப்பது மொத்தமே 35 அமைச்சர்களின் குடும்பங்கள்தான். இந்த ஒரு லாரி தண்ணீர் பொதுவான பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள்தான் செல்லும். அதிலும் மெட்ரோ தண்ணீரை தனியாருக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைக்கும் ஓட்டுநர்களால் அதுவும் செல்வதில்லை. தண்ணீர் இப்படியாக இருக்கும்போது இவ்வளவு தண்ணீர் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல்தான் அரசு உயர் அதிகாரிகள் மற்ற அமைச்சர்கள் வீட்டிற்கும் செல்கிறது. மாட்டை குளிப்பாட்டுவது முதல் அனைத்து வேலைகளையும் இந்த மெட்ரோ நீர் மூலம்தான் செய்கிறார்கள் என்ற பேச்சு அந்தப் பகுதியில் எழுந்துள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.