Water opening at Vaigai Dam! Three Ministers and four District Collectors participated

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர்முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் உள்ள பெரிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீருக்கு நான்கு மாவட்ட ஆட்சியாளர்களும் மூன்று அமைச்சர்களும்மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

தமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பகுதியான 19,439 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,130 கனஅடி வீதம் இன்றுமுதல் (11.08.2021) 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மதுரை மாவட்ட ஆட்சியர்அனீஸ்சேகர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சுகுமாறன், பவளக்கண்ணன், முல்லைப் பெரியாறு பிரதான கோட்ட செயற்பொறியாளர் மற்றும் விவசாயிகளோடு பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Advertisment