/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A39_9.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் கால்வாய்க்கு அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.நாரவாரிக்குப்பம், வடகரை, கொசப்பூர் மணலி புதூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சடையங்குப்பம், கிராண்ட் லைன் உள்ளிட்ட பகுதி மக்கள் கவனமாகஇருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3493.jpg)
தற்போதைய நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல்ஏரியில்2,898 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 21.2 அடி உயரம் கொண்டு ஏரி தற்போது 19.42 அடிக்கு நிரம்பியுள்ளது. நீர்வரத்து 570 கன அடி ஆகவும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மாலை 4:30 மணிக்கு மேல் 1,500 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காலையிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியில் 1,000 கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)